தொடர்கள்
தொடர்கள்
மக்கள் பார்வையில் கம்பர் - 02 -ரமேஷ் எத்திராஜன்

20220830210030179.jpg

மக்கள் பார்வையில் கம்பர்

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

பாலகாண்டம்
நாட்டுப்படலத்தின் பாடல்

20220830214454545.jpg
கூற்றம் இல்லை ஓர் குற்றம் இல்லாமையால்
சீற்றம் இல்லை தம் சிந்தனையின் செம்மையால்
ஆற்றல் நல்அறம் அல்லது இல்லாமையால்
ஏற்றம் அல்லது இழித் தகவு இல்லையே


கோசல நாட்டு மக்களிடம் குற்றம்
இல்லாததால் கூற்றுவன் அதாவது
எமனின் கொடுமை இல்லை

மரணமே இல்லை என்று கம்பர்
கூறவில்லை
இயற்கை மரணமின்றி குற்றங்களால்
வரும் சண்டை சச்சரவுகளால்
துர்மரணம் அகால மரணமில்லை
என்கிறார் கம்பர்

குற்றம் இன்மையால் மனத்தூய்மை
அடைகிறது
அதனால் மக்களிடம் கோபம் இல்லை
இதனால் நற்சிந்தனை தோன்றி
நல் அறம் தழைப்பதால் தீய
செயல்கள் இல்லை

குற்றமற்ற வாழ்வு வளமானது
நலமானது அமைதி தர வல்லது
என்ற அறநெறியை நீதியை
சாதாரண பாமர மக்களுக்கும்

எளிதில் புரியும்படி மிக எளிமையாக
காட்சிப் படுத்திய கம்பரின்
சொல் நயம் குடி மக்கள்
மத்தியில் அற உணர்வைத் தூண்டி
நற் சிந்தனை மேலோங்க
வழி வகுக்கிறது

குற்றம் அழிவைத் தரும்
துன்பத்துக்குக் காரணம் குற்றம்
என உரைத்த கம்பரை
போற்றுவோம் பாராட்டுவோம்

மீண்டும் சந்தித்து சிந்திப்போம்