தொடர்கள்
கவிதை
வெளிப்பாடு-மகா

மனசு

2022901180153724.jpg

ஓடிக்கொண்டிருக்கும்

புறநகர்த் தொடர்வண்டிக்குள்

ஒலித்த

பார்வையற்ற யாசகனின்

ஜீவிதமான குழலிசைக்கு

கிடைத்த

பெருங் கௌரவங்கள்

அவன்

கழுத்தில் தொங்கிய

தகரக் குவளைக்குள்

சில்லறைக் காசுகளாய்

உருமாறிக் கிடந்தன.