தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 4 காவிரி மைந்தன்

20220728204106471.jpg

20220728204156395.jpg

நான் மலரோடு தனியாக

காதல் கீதங்களின் உச்சத்தை எட்டிப்பார்க்க எண்ணுபவர்கள் கண்ணதாசன் பாடல்களை நுகரலாம். இலக்கிய ரசனையைத் திரைப்பாடல்கள் வாயிலாகவும் தரமுடியும் என்று நிருபித்தவர் கவிஞராவார். 1998ல் துபாயில் முதன் முறையாக அயலகப் பணி மேற்கொண்டிருந்தபோது காலையும் மாலையும் வாகனப் பயணங்களின்போது தமிழ்த்திரையிசைப் பாடல்களோடு சங்கமித்து சென்ற நாட்கள் வசந்தகாலங்கள் என்பது மிகையில்லை.. அப்படியொரு நாள் மலையாள மொழிபேசும் ஒரு அதிகாரி என்னிடம் விவாதித்த பாடலிது. அவர் தமிழ் மொழியை முழுமையாக அறிந்தவரில்லை.. எனினும் இந்தப் பாடலின் வரிகள் தம்மை வெகுவாகக் கவர்ந்தவை என்றார்.

என் கருங்கூந்தல் மேகங்கள் கலைந்தோடியாட..

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற..

அடடா.. பாடல் வரிகளில் உள்ள சுகம்.. இசை நயம்.. குரல் வளம் என்று பாராட்டி மகிழ்ந்தார்.. திரு.ஜார்ஜ் என்னும் அந்த இனிய நண்பர்.

பிறகு இலக்கிய வட்டத்தில் எனது தோழர்களோடு இதைப்பற்றிக் கூறியபோது.. இன்னும் சில செய்திகள் இப்பாடல் பற்றி கிடைத்தன. அதையும் கேளுங்களேன்..

பொதுவாக.. இந்திப் படங்களில் வெற்றி பெறும் பாடல் மெட்டுக்களைத் தமிழில் அப்படியே தன் பாணியில் தருவதில் வல்லவர் இசையமைப்பாளர் திரு.வேதா அவர்கள்.. அப்படியொரு பாடல் பிறந்த விதம் பாருங்கள்.. இசையின் வடிவம் இந்திப்பாடலில்.. கேட்டுக் கொண்டார் கண்ணதாசன்!

பொதுவாக திருமணமானபின்னரே.. கணவன் மனைவியிடம் உரிமையோடு அங்கே பார்க்காதே.. அங்கே செல்லாதே.. என்றெல்லாம் கூறுவதுண்டு. ஆனால்.. இப்பாடலில்.. காதலி.. காலம் கடந்து வந்தமைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று தானே கேட்கும் காதலனுக்கு காதலி தருகின்ற பதில் என்கிற வகையில் பாடல் பிறக்கிறது.. நிறைகிறது..

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

பெண் தரும் பதிலில்..

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

எத்தனை நயங்கள்? எத்தனை இலக்கிய அழகு? எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத காதல் பாடல் அல்லவா? இசையின் கோர்வையும் கவிதையோடு கைகோர்த்தல்லவா பவனி வருகிறது? இரவின் மடியில் இளமை மழையில் நனைகின்ற போதெல்லாம்.. இதமான தென்றலாய்.. இப்பாடல் ஒலிக்கட்டுமே! கவியரசரின் கற்பனைத் திறனை, இலக்கிய நயத்தை எண்ணியெண்ணி என்றென்றும் மகிழலாமே!!

பாடல்: நான் மலரோடு தனியாக திரைப்படம்: இரு வல்லவர்கள்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா ஆண்டு: 1966

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்.........

தொடர்வோம்....