சாதாரண குடிமக்கள் பார்வையில்
கம்பர்
பால காண்டத்தில் ஆற்றுப்படலத்தில்
வரும் பாடல் இது
காப்பியத்தை இயற்றிய கம்பர்
அதன் வழியே சாதாரண குடி
மக்களும் எளிதில் புரியும்படி
பாடல்கள் இயற்றியது சிறப்பு
இந்த பாடலில் உணவு முறையை
கம்பன் எளிமையாக சாதாரண
மக்களுக்கு எளிதில் புரியும்படி
நயமாக உரைக்கிறார்
உணவிற்க்கு முன் முக்கனி
இன்றைய அறிவியலும்
சாப்பிடுவதற்கு முன் கனிகள்
சாப்பிடுவதால் உடலில் உள்ள
கழிவுகள் வெளியேற வழி
வகுப்பதாக கூறுகிறது
பிறகு பலதரப்பட்ட பருப்புவகைகள்
அதாவது புரதச்சத்து
அது மூழ்க்கும்அளவு நெய்
நெய் ஜீரண சக்திக்கு உதவுகிறது
சுண்ட காய்ச்சிய பாலில் உறை
ஊற்றிய செந் தயிர்
பால்புரதம்
இவற்றுக்கு இடையே செறித்த
சோறு
தம் தம் வீட்டில் விருந்தினரோடும்
உறவினரோடும் மகிழ்ந்து
பகிர்ந்து உண்ணும்
விருந்தோம்பலை சாதாரண
மக்களுக்கு புரியும்படி
எளிதாக கம்பர் உரைப்பது சிறப்பு
இதில் விருந்தோம்பல் எனும்
நீதியை நயமாக உரைக்கிறார்
கம்பர்
மீண்டும் சந்தித்து சிந்திக்கும்
வரை விடை பெறுவது
Leave a comment
Upload