தொடர்கள்
பொது
வாட்டி வதைக்கும் வெயில்-ஜாசன் வெயில் ஸ்பெஷல்

2024032518430515.jpg

தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறி வருகிறது. இதன் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகம் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீச கூடும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக நேற்று நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் சேலம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒன்பது இடங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை சேலத்தில் 42.3 டிகிரி செல்சியஸ். ஈரோட்டில் 42 டிகிரி பதிவாகி இருக்கிறது. இதேபோல் திருப்பத்தூரில் 41.6 டிகிரி செல்சியஸ், கரூர், பரமத்தி, வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ், தர்மபுரி மற்றும் மதுரையில் 41 டிகிரி செல்சியஸ் நாமக்கல்லில் 40. 5 டிகிரி செல்சியஸ் மற்றும் திருச்சியில் 40.1 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழக உள் மாவட்டங்களில் 38 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருக்கிறது. தமிழக கடலோரப் பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 முதல் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கிறது. மலைப்பகுதிகளில் 21 முதல் 28 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கிறது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.3 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.1 செல்சியஸ் பதிவாகி இருக்கிறது.

வெப்ப அலை காரணமாக கோவை மாவட்டத்தில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடிதெரிவிக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும் அத்தியவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்து விடுமாறும் வெயிலில் தாக்கத்தால் உடல்நலவு குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் அந்த அறிக்கையில் கோவை மாவட்ட தலைவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

20240326210551529.jpeg