போன வாரம் ஜூன் 3 ஆம் தேதி ஐபிஎல் 18க்கு மங்களம் பாடியாச்சி. இனி அடுத்த வருஷம் பாப்போம் என்று விலகினோம்.
இருந்தாலும் அதன் சில விட்டுப் போன செய்திகளைப் பகிரலாம்னு தான் இப்ப வந்திருக்கேன்.
ஆர்சீபீ கப்பை நம்முதுன்னு எடுத்துட்டு போச்சி. பாவம் அதை மறுநாள் அணியின் பேரில் பெங்களூரு இருப்பதால் அதை அந்த நகரத்தில் கொண்டாடப் போயி….நடந்த துக்கங்கள் தாம் நாம் பார்த்தாயிற்றே.
பல அணிகள் கொண்ட ஒரு போட்டி தொடர் முடிந்த பின்னர் கிரிக்கெட் பண்டிதர்களின் வெற்றி அணி என்று பங்கு கொண்ட வீரர்களின் அசத்திய ஆட்டங்களை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். அதே மாதிரி ஃப்ளாப் ஆன வீரர்களை வைத்து ஒரு தோல்வி அணியையும் குறிப்பிடுவார்கள்.
அந்த வகையில் தோல்வி அணி என அறிவிக்கப்பட்ட அணி வீரர்கள் இதோ:
- ரூ 9 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்த்ரேலியாவின் அதிரடி அட்டக்காரர் ஃப்ரேசர் மெக்குர்க் (டெல்லி அணி) எடுத்த ரன்கள் 55
- ரூ 3.40 கோடிக்கு ஆடவந்த ராஹுல் த்ரிபாதி (சென்னை) எடுத்த ரன்கள் 55.
- கொல்கட்டா அணிக்கு ஆடிய தென்னாஃப்ரிக்கா தேசத்து குஇன்டன் டெ காக் எடுத்தது 152 ரன்கள்.
- ரூ 27 கோடிக்கு லக்னௌ அணிக்கு ஆடிய அதன் கேப்டனும் விக்கட்கீப்பரும் ஆன ரிஷப் பந்த் எடுத்த மொத்த ஓட்டங்கள் 269. முக்கியமாக இந்த ஐபி எல் 18 தொடரில் தனது அணியை ப்ளே ஆஃப்க்குக்கூட கொண்டு சேர்க்கவில்லை என்பதே அவர் மீதான குற்றசாட்டு.
- 23.75 கோடி ரூபாய்க்கு கொல்கட்டா அணியில் ஆடிய வெங்கடேஷ் அய்யர் எடுத்தது 142 ரன்கள் மட்டுமே.
- பஞ்சாபுக்கு ஆடிய ஆஸ்த்ரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல் எடுத்தது வெறும் 48 ரன்கள். இருப்பினும் அந்த அணி இவரது சேவையைக் கருதாது ஆடியே இறுதி வரை வந்ததே.
- இந்த ஐபிஎல் 18ன் வெற்றி அணி பெங்களூரு அணிக்கு ஆடிய இங்கிலாந்தின் லியம் லிவிங்க்ஸ்டோன் எடுத்ததோ 112 ரன்கள் மட்டுமே.
- ஹைதராபாதின் நிதிஷ்குமார் ரெட்டி எடுத்ததோ 182 ரன்களே.
- ரூ 9.75 கோடிக்கு சென்னை அணியில் சேர்ந்து ஆடிய அஷ்வின் 9 மேட்சில் 7 விக்கெட்டுகளே எடுத்திருந்தார்.
- டெல்லிக்கு ஆடிய முகேஷ்குமார் என்னும் பௌலர் எடுத்ததோ 12 விக்கெட்டுக்களே. இருப்பினும் அந்த அணி சிறப்பாகத் தான் ஆடியது. ப்ளே ஆஃபில் வராதது அதன் துரதிர்ஷ்டமே.
- 9 மேட்சில் 6 விக்கெட்டுகளே எடுத்த ஹதராபாத் அணியின் முஹம்மத் ஷமி.
இந்த ஐபிஎல் 18ன் வெற்றி அணி இதோ
- கேப்டனாக பஞ்சாப் அணியின் ஷ்ரேயாஸ் அய்யர். 604 ரன்கள் எடுத்திருக்கிறார்.
- குஜராத் அணியின் சாயி சுதர்ஷன் ஒப்பனிங்க் பேட்ஸ்மேன் (பின்ன என்ன? இந்த தொடரில் அதிக ரன்கள், 759, அவருக்கு தானே ஆரஞ்ச் கேப் வாங்கியவராச்சே)
- பெங்களூரு அணியின் விராட் கோலி 657 ரன்கள் குவிச்சவராச்சே.
- குஜராத் அணியின் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் தான் விக்கட்கீப்பர். 538 ஓட்டங்களை எடுத்திருக்கிறார்.
- மும்பை அணியின் சூரியகுமார் யாதவ். 717 ரன்கள் அடித்திருக்கிறார்.
- லக்னௌ அணியின் மேற்கிந்திய பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரான் (524 ரன்கள் எடுத்துள்ளார்)
- பெங்களூருவின் க்ருணால் பண்ட்யா. நல்ல ஸ்பின் பௌலர். இந்த ஐபிஎல் இறுதி போட்டியின் ஆட்ட நாயகன் இவர் தானே. ரன்களை விட்டுக்கொடுக்காத கருமி. அன்று டெல்லியோடு கண்டிப்பாக ஜெயிக்கக்கூடிய மேட்ச்சில் 73 ரன்களை எடுத்து பேட்டிங்கிலும் கிங்கு தான்.
- குஜராத்தி ப்ரசித் கிருஷ்ணா. நல்ல பௌலர். 25 விக்கெட்டுகளை எடுத்து இந்த ஐபிஎல்லின் பர்ப்பிள் கேப்பை வெற்றி கொண்டவர்.
- சென்னை அணிக்கு ஆடிய ஆஃப்கானிஸ்தானின் நூர் அஹ்மத். இவரும் நல்ல ஸ்பின் பௌலர். 24 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் இவர் ஒரு வீக்கெட் வித்தியாசத்தில் பர்ப்பிள் கேப்பை தவற விட்டவர்.
- ஆஸ்த்ரேலிய வேக பந்து வீச்சாளர். பெங்களூருக்கு ஆடிய ஜோஸ் ஹேசல்வுட். 22 வீகெட்டுகளை எடுத்திருக்கிறார்.
- மும்பை அணியின் ஜஸ்ப்ரீட் பும்ரா. 18 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதுவும் சராசரியாக வெறும் 6.67 ரன்கள் என்ற விகிதத்தில்.
வயது 29 தான் ஆகிறது. லக்னௌவுக்கு ஆடிய மேற்கிந்திய தீவுகளின் நிகோலஸ் பூரான் அனைத்து ஃபார்மேட்டுகளிலிருந்தும் ரிடையர் என்று அறிவித்தது தான் ஷாக். ஆனால் ஐபிஎல் மாதிரி தொடர்களில் ஆடுவாராம். மும்பை அணியின் அமெரிக்க அணியின் கேப்டன் இவர் தான் இனி.
பெங்களூரு அணியை விற்க ஏற்பாடு நடக்கிறதாம். விலை 2 பில்லியன் டாலர்கள் தாம்.
யுனைட்டட் ஸ்பிரிட்ஸ்ஸின் டையாஜியோ plc இந்த அணியின் உரிமையாளர். யாராவது ரெடியா?
கொல்கட்டா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கை சமாஜ்வாதி பார்டியின் எம்பி ப்ரியா சரோஜ் அலாக்காக தூக்கிவிட்டார் திருமணம் செய்துகொள்ள.
இப்போது நடந்தது நிச்சயதாம்பூலம் தான். 3 வருஷமா இந்த தொடர் ஓடிட்டிருந்ததாம் என்று கூறுகிறார் அந்த எம்பி. பாவம் ரிங்கு. இனி அரசியலும் ஆட வேண்டும்.
Leave a comment
Upload