ஜப்பானிய மருத்துவ பேராசிரியர் ஹிரோமி சாகாயின் தலைமையிலான ஆய்வு குழு செயற்கை ரத்தத்தை 2 வருடங்கள் வரை கெட்டுப்போகாமல் சேமிக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. இதற்கு . காலாவதியான ரத்தத்திலிருந்து ஹீமோகுளோபினைப் பிரித்தெடுத்து இந்த செயற்கை ரத்தம் தயாரிக்கப்படுகிறது.பொதுவாக, ரத்த வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ரத்தத்துக்கு 42 நாட்கள் மட்டுமே ஆயுள்காலம் உண்டு. ரத்தம் பெறுபவரின் குறிப்பிட்ட வகையுடன் பொருந்துமா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இந்த செயற்கை ரத்தத்துக்கு அப்பிரச்னைகள் எதுவும் இல்லை. தற்போது, இந்த செயற்கை ரத்தம் தன்னார்வலர்களிடம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இம்முயற்சி வெற்றி பெற்றால், வரும் 2030-ம் ஆண்டுக்குள் இப்புதிய செயற்கை ரத்த தொழில்நுட்பம் மருத்துவ பயன்பாட்டுக்கு வரும். அவசர மருத்துவ சேவைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்
Leave a comment
Upload