“சார்ந்தோர் நலமும் மகிழ்வும் அன்றி வேறொன்றும் வேண்டேன் பராபரமே !” - க -
தூக்கத்தில் ஏதேதோ கனவுகள். புரண்டு எழுந்தேன். நாக்கு வறண்டு தாகமெடுத்தது. நள்ளிரவு தாண்டிபன்னிரண்டரை மணி என மணிக்கட்டு டிஜிட்டல், ஒளிர்ந்து காட்டியது. தண்ணீர் குப்பியை தேடிஎடுத்து, மூடி திறந்து நாலு மிடறு நிதானமாய் தொண்டைக்குழியில் இறங்கியதும் தூக்கம் கலைந்தது. மெல்ல நடந்து ஜன்னலருகே சென்று திரைச்சீலையை விலக்க, குபீரென குளிர்ச்சியான பனிக்காற்றும்பால்வண்ண வெளிச்சமும் படுக்கையறைக்குள் பாய்ந்து நுழைந்தன. ஜன்னலுக்கு வெளியே சுத்தமானநீல வானம். மேற்கு திசையில், சற்று தென்மேற்காய் விலகி, அரிவாளால் சரிபாதியாய் வெட்டி தொங்கவிட்டாற்போல் வளர்பிறை வெள்ளை நிலா. மிதக்கும் சிறு வெண்பட்டு மேகத்தை தலையணையாய்பாவித்து அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் நிலவின் வசீகரம் பல லட்சம் கிலோமீட்டர்தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் எனக்குள்ளே இனம்புரியாத உற்சாகத்தைஉண்டாக்கியது. மீண்டும் படுக்கைக்குச் செல்ல மனமில்லை. மேசைக்குச் சென்று ஏதாவது எழுதலாம்என்று தோன்றியது.
எழுத்து என்பது எல்லா வயதினர்க்கும் உதவும் ஊன்றுகோல். எழுத்து, படிப்பவர்க்கு மட்டுமல்ல, அதுஎழுதுபவர்க்கும் நமபிக்கையூட்டுகிறது. இசையைப் பதிவு செய்வதைப் போல உணர்வுகளைப் பதிவுசெய்வது எழுத்து. எழுதுகிறவர் உள்ளுணர்வை படிப்பவர்களுக்கு, படிக்கும் போதெல்லாம் தரவல்லது. வலிய சொல்லும் வெற்று உபதேசங்களும் அறிவுரைகளும் எவரையும் மாற்றி விடாதுதான். ஆனால்விரும்பித் தேடுபவர்கள் கையில் கிடைக்கும் போது வாழ்வின் திறவுகோலாய் அமைந்து விடும் என்பதும்உண்மை.
வாசற்கதவு திறந்து படிக்கட்டு வழியே மொட்டை மாடிக்குப் போய் அகண்ட ஆகாயத்தை அண்ணாந்துபார்த்து ரசிக்க வேண்டுமென்று ஆவல் எழுந்தது. இன்றைய தினம் எப்படியிருக்கும் என்றுஆகாயத்தைப் பார்த்து கேட்கத் தோன்றியது. வானத்திடம் யோசனைக் கேட்பது பைத்தியக்காரத்தனம்என்று தோன்றலாம். ஆனால் வானத்தைப் போல உலகில் நம்பிக்கையூட்டுவதற்கு யாருமில்லை. யாருமில்லாத வானத்தோடு என்ன பேச்சு? யாருமில்லையா, யார் சொன்னது? பிறந்தவர்கள்மறைந்தவர்கள் இனி பிறக்கப் போகிறவர்கள் எல்லோரையும் உள்ளடக்கியது அல்லவா அண்டம். தொடமுடியாத தூரத்திலிருந்து கண் சிமிட்டும் காட்சித் தொகுப்பு வானம்.
வானில் பயணிகள் விமானம் ஒன்று கிழக்கு திசையில் இருந்து ஒளிப்புள்ளியாய் சீரான தூரத்துசத்தத்தோடு பறந்து போய் கொண்டிருந்தது. மேற்கே திருச்சி விமான நிலையத்தின் ஓடுதளத்தில்சற்று நேரத்தில் தரையிறங்கலாம். மீண்டும் மேலெழும்பி கோவைக்கோ கொச்சினுக்கோ பறந்துபோகலாம். நாமும் அப்படித்தான். பூமியில் தரையிறங்கியுள்ள பயணிகள். குறிப்பிட்ட நேரத்தில்விமானம் மேலெழுவதைப் போல, நாமும் இங்கிருந்து புறப்பட்டு பயணப்பட வேண்டும். ஓடுதளம்என்பது விமானங்கள் நிரந்தரமாய் தங்குவதற்கான இடமில்லை. நின்று போக மட்டுமேபயன்படுத்தப்பட வேண்டும்.
பூமியும் நமக்கு அப்படித்தான். நம் அடுந்த நிறுத்தம் எங்கே என்பதுதான் கேள்வி? வானில் தெரியும்மின்மினி நட்சத்திரங்களில் நமது அடுத்த நிறுத்தம் எங்கே என்று இந்த அகண்ட வானத்திற்குதெரிந்திருக்குமல்லவா?. நமக்கும் தெரிந்துகொள்ள ஆசைதான். கேட்டால் வானம் சொல்லுமா? வாயைத் திறந்து உண்மையைச் சொல்லி விட்டால் நம்மில் எத்தனை பேர் தர்க்கமில்லாமல்ஒத்துக்கொண்டு மூட்டை முடிச்சைக் கட்டத் தொடங்குவோம்? சொல்ல வேண்டாம். தெரியாதவரைதான் நிம்மதி. தெரிந்தால் அந்தக்கணமே நிம்மதி போய்விடும்.
இப்போதெல்லாம் அரைக்கால் சட்டையும் அமெரிக்க ஷூவும் அணிந்து கொண்டு நடைப்பயிற்சிப்போவது என்பது மிகவும் பிடித்தமானதாகி விட்டது. விடிந்தும் விடியாத ஐந்து மணிக்கெல்லாம்வாசலுக்கு வந்துவிட வேண்டுமென்று பரபரக்கின்றது மனசு. நான்காம் தெரு நந்தகோபால், போனமாதம் ரிட்டையரான தாசில்தார், நடைபயிற்சிக் குழுவில் இணைந்து கொண்ட புதிய உறுப்பினர். பேசிக்கொண்டே வெளிவட்ட சாலை வரை போய் வட்டமடித்துத் திரும்புவது குழுவின் தினசரிவழக்கம்.
தெரு முனையில் நந்தகோபால் நின்று கொண்டிருந்தார். “வணக்கம் சார்” என்று புன்னகைத்தார்.
“உங்க ஷூ மேல எனக்கு ஒரு கண்ணு, சூப்பரா இருக்கு சார்..”
“அதான் அடுத்த மாதம் அமெரிக்கா போறீங்களே.. பையன்கிட்ட சொல்லி நைக் பாக்டரி அவுட்லெட்லஆபர் போடுவான்.. அப்ப பார்த்து வாங்கிக் கொடுக்க சொல்லுங்க..”
“முதல் முறையா அமெரிக்கா போறோம்.. கொஞ்சம் நர்வசாதான் இருக்கு .. இமிகிரேஷன்லகுடைவான்களாமே ..”
“அதெல்லாம் ஒன்னுமில்லே சார் .. ஜாலியா போயிட்டு வாங்க .. மேடத்த டிஸ்னி வேர்ல்டுக்குகூட்டிகிட்டுப் போங்க.. காசைப் பார்க்காதீங்க..”
சமீப காலமாய் பாக்கெட் பால் வாங்குவதில்லை. அதிகாலையிலேயே நாட்டுப்பால் பெரிய பெரியகேன்களில் கொண்டு வந்து, ரோட்டோரத்தில் வைத்து விற்பனை செய்கின்றார்கள். வீட்டுக்கு வரும்வழியில் ஒரு லிட்டர் வாங்கிக் கொண்டு வந்தால் மணக்க மணக்க காபி கிடைக்கும்.
மனைவியிடம் பாலைக் கொடுத்து விட்டு காபி போடுகிற இடைவெளியில் வீட்டின் பின்புறம் ஆசையாய்பராமரிக்கும் சின்ன காய்கறி தோட்டத்தின் நலம் விசாரிக்கச் சென்றேன். செடிகொடிகள்வளர்ப்பவரின் ஸ்பரிசத்தை அடையாளம் கண்டு கொள்கின்றன என்று நம்பத் தொடங்கி விட்டேன். தோட்டம் பக்கம் போனால் நானும் உற்சாகமாகி விடுவேன். செடிகளும் உற்சாகமாகி விடுவதைகவனிக்க முடிகிறது. நன்றாய் பழுத்த தக்காளிகளையும், கொஞ்சம் பச்சை மிளகாயும் பறித்துக்கொண்டு வருவதற்குள் சூடான காபி ரெடியாயிருந்தது.
காபியை சுவைத்துக் கொண்டே செய்தித்தாள் வாசிப்பது என்பது பல வருடங்களாய் பழகிவிட்டஆனந்தம். இன்று பேப்பர் போடும் தம்பியை இன்னும் காணவில்லை.
பால்கனியில் அமர்ந்து கடைசி சொட்டு வரை காபியை குடித்து முடித்து எழுந்த போது, பேப்பர்போடும் தம்பி ஹிண்டு பேப்பரை லாவகமாய் பால்கனிக்கு ஏவினார்.
“சார்.. விஷயம் தெரியுமா ?”
“என்னப்பா ..?”
“நாலாந்தெருவில் தாசில்தார் சார்… வாக்கிங் பொயிட்டு வரும் போதே ஹார்ட் அட்டாக் சார்”
“ஐய்யோ.. என்னாச்சு…”
“வாசல்லேயே விழுந்துட்டார்.. ஒரு நிமிஷத்துல.. கண்முன்னால.. முடிஞ்சு போச்சு சார்.. அதான்லேட்டு..”
அதிர்ச்சியில் மெலே அண்ணாந்து பார்த்தேன். நந்தகோபால் வானத்தில் நட்சத்திரங்களுக்குஇடையில் பயணித்துக் கொண்டிருந்தார்.
Leave a comment
Upload