தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250514102524916.jpg

Heading : காருகுறிச்சியை தேடி ஆசிரியர் : லலிதாராம் புத்தக விமர்சனம்- இந்துமதி

Comment : காருக்குறிச்சியாரின் சுவாரசிய தகவல்கள். நாதஸ்வர இசையே இனிமை தானே. தெவிட்டா இன்பமது. திருச்செந்தூர் கோவிலில் இசைக்கு மயங்கி ஊமையானவர் சிலிர்ப்பு. சிலை அமைத்த கதை மனவருத்தமே. மாண்பில்லா மனிதர்கள். 'சால கல்லலாடு' 👌. நூலை வாசித்தால் இனிமையை பெறமுடியும் தான். சஞ்சாரம் நினைவில் மிதந்து போனது. ரசனையோடு எழுதியுள்ளீர்கள் 💜💜💜

Rasal, நெல்லை

Heading : ஒரு வெற்றிக் கோப்பையும் ஏராள சோகமும் - விகடகவியார்

Comment : மனம் வலிக்கிறது .இனி இம்மாதிரி சோகமான நிகழ்வுகள் நடக்காதிருக்க கடவுள் அருள் புரிய வேண்டும் .🙏🙏🙏🙏

Chandra Ramakrishna., Chennai

Heading : பொது மக்களுக்கும் பொறுப்பு உண்டு

Comment : நீர்நிலைகளை மாசுபடுத்துபவர்களுக்கு, அவர்களின் தவறுகளை உணர்ந்து, மீண்டும் செய்யாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும். 'இது நமக்கானது. இதை பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு வழங்க வேண்டும்' என்று அனைத்து மக்களுக்கும் அச்சு உணர்வு ஏற்பட்டால் தான் உரிய தீர்வு கிடைக்கும்.

பத்மினி கோபாலன், சுகுமாரன், திலகா, விசாகப்பட்டினம்

Heading : ஸ்ரீநகருக்கு ரயில் பாதை - பால்கி

Comment : ஒரு பிரம்மாண்ட, என்றென்றும் போற்ற தக்க, உலக அளவில் மார் தட்டி பெருமைப்பட வேண்டிய சாதனை 🙏🙋

Sriram Srinivasan, சென்னை

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : முற்றிலும் உண்மை 🙏

Sriram Srinivasan, சென்னை

Heading : விசேஷம் மிகுந்த வைகாசி விசாகம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : வைகாசி விசாகம் - கட்டுரை அருமை👏

Sriram Srinivasan, சென்னை

Heading : அட இதக் கேட்டீங்களா – பால்கி

Comment : ஆலிம் ஹக்கிம் ஒரு முடிவெட்டி மன்னன்👏...அவர் கேட்கும் தொகையை தர பிரமுகர்கள் இருக்கும்போது அவர் காட்டுல மழைதான்..... ஹுசைன் போல்ட்ஐ பாராட்டியே ஆக வேண்டும்....ஒரு போதை மருந்து சாப்பிடும் நபரை தன்னையே மிஞ்சும் அளவுக்கு மாற்றியதற்கு👏 அதே சமயம் காட்லின் அவர்கள் திறமையையும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தையும் பாராட்ட வேண்டும் 👏👏

Sriram Srinivasan, சென்னை

Heading : அழியாத ரேகைகள்"விகடன் எம்.டி " பற்றி வீயெஸ்வீ - வேங்கடகிருஷ்ணன்

Comment : உழைப்பே உயர்வு தரும் என்ற வாசகம் வழியில் அத்தனை உயர்ந்த மனிதராய் நின்ற திரு எஸ் எஸ் பாலன் அவர்களின் வாழ்க்கையோடு பயணித்ததை நேர்த்தியாக சொல்லி, முடிக்கும் போது பாலன் சார் மேல் மதன் அவர்கள் கொண்டிருக்கும் அன்பும் மரியாதையும் விகடகவி ஆக இன்று இருக்கிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

Heading : ஆசை – சிறுகதை - பா.அய்யாசாமி

Comment : அழகான நடையில் என்ன ஆசை அந்த வயதில் என்று யோசிக்க வைத்து, பின்னர் தன்னோடு மட்டும் அல்லாமல் தன் மனைவியின் ஆசையையும் பூர்த்தி செய்வதாக முடித்த அழகு பிரமாதம்... பாஸ்கர் கோவை

Heading : விசேஷம் மிகுந்த வைகாசி விசாகம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வைகாசி விசாகத்தில் முருகன் எப்படி ஆறுமுகனாய் அவதரித்தார் என்றும், முருகன் அன்றி வைகாசி விசாகம் எத்தனை தெய்வங்கள், எத்தனை முக்கிய புராண நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.. நன்றி பாஸ்கர் கோவை

Heading : சரியான தீர்ப்பு -தில்லைக்கரசிசம்பத்

Comment : FIR பற்றிய தகவல்கள் வெளியாக்கிய அதிகாரிகளுக்கு 25லட்சம் தண்டனை ரொம்பவே பாராட்டப்பட வேண்டியது. 30ஆண்டுகள் சிறை தண்டனை எனக்கு குறைவாக தெரிகிறது...தூக்கு தண்டனை தான் இந்த மாதிரி குற்றம் புரிபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும் என நினைக்கிறேன்.... 30வருடம் இந்த கபோதிக்கு நம்ம கட்டிய வரிப்பணம் செலவாகுமே என்ற வருத்தம் வருகிறது.... ஏனென்றால் இது போல் "சார்" சப்போர்ட் உள்ளவர்கள் சிறையில் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்....

Sriram Srinivasan, சென்னை

Heading : பொது மக்களுக்கும் பொறுப்பு உண்டு

Comment : அரசாங்கத்தைடை விட அதிகமாக பொது மக்களுக்கு பொறுப்பு வேண்டும்.... அது வரவேண்டும் என்றால் தண்டனையை (அபராதம்) அதிகம் செய்தால்தான் முடியும்....

Sriram Srinivasan, Chennai

Heading : காருகுறிச்சியை தேடி ஆசிரியர் : லலிதாராம் புத்தக விமர்சனம்- இந்துமதி

Comment : காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் பெயரைக் கேட்கும் போதே மனம் மகிழ்கிறது• திருவாசக த்திற்கு உருகாதவர் ஒருவாசகத்திற்கும் உருவாக்க என்பது போல் இவரின் நாதஸ்வர த்தை நாள் முழுவதும் கேட்கலாம்• நாங்கள் பள்ளி பயிலும் நாட்களில் சேரன்மகாதேவி அரசினர் மேல்நிலைப்பள்ளி யில் காலை வழிபாட்டு கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன் இவரது நாதஸ்வரம் ஒலிக்கும்• இந்த ஊரில் பிறந்த என் உள்ளம் இக்கட்டுரை யை படிக்கும் போது உணர்ச்சி வசப்படுகிறது• மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றை பற்றி விகடகவியார் வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்•

Ujjivanam, Chennai

Heading : ""இவர் தந்தை என் நோற்றான் ?" -மரியா சிவானந்தம்

Comment : பட்டங்கள் பல பெற்று கல்வியில் ஆணுக்கு ப் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிருபித்த ஐஏஎஸ் மாணவச்செல்வங்களுக்கும் அவர்களை உருவாக்கிய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்

Ujjivanam, Chennai

Heading : நயத்தகு நற்றிணை -26 -மரியா சிவானந்தம்

Comment : நயம் மிகுந்த கருத்து

Ujjivanam, Chennai