நீலகிரி மாவடத்தில் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து இழுத்த இடம் ஊட்டி ரேஸ் கோர்ஸ் -குதிரை பந்தைய மைதானம்.

பிரிட்டிஷ் காலத்தில் இருந்து அனைவரையும் ஈர்த்த ஒன்று என்று சொன்னால் அது இந்த ரேஸ் கோர்ஸ் தான்.
குதிரை பந்தயம் என்பது ஒரு பக்கம் சூதாட்டம் என்று இருந்தாலும் குதிரைகள் ஓடுவது உலா வருவது என்பது ஒரு அழகான விஷயமாக இருந்தது.
55 ஏக்கர் நிலப்பரப்பில் 2.4கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
130 ஆண்டுகள் குதிரை பந்தயம் நடந்த ஒரு ஐலண்ட் மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 2,268 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குதிரை பந்தய மைதானம்.

தற்போது குதிரை பந்தயம் நிறுத்தப்பட்டு அந்த பெரிய நிலம் இயற்கை சூழல் பூங்காவாக மாற்றப்பட்டு வருவது இயற்கை ஆர்வலர்களை முகம் சுளிக்க வைத்து போராட வைத்துள்ளது.

சூழல் பூங்கா ஈரநிலப்பகுதியை மாற்றி அமைத்து சில கட்டுமானங்களை மேற்கொள்ளும்போது மிக பெரிய பாதிப்பை ஊட்டி சந்திக்க வேண்டியிருக்கும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள் நடுக்கத்துடன்.
நீலகிரி சுற்றுசூழல் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி சுர்ஜித் சௌதரி தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
சீனியர் சிட்டிசன் பெண்கள் மற்றும் ஆண்கள் அமைதி வழி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார்கள்.

24 ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்த குழு போராட்டத்திற்கு ரெடியாக காவல் துறை இயற்கை ஆர்வலர்களை கைது செய்யும் ஐடியாவில் ஒரு பெரிய காவல் துறை பேருந்தை நிறுத்தி வைத்தது.
முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சுர்ஜித் சௌதரி டி எஸ் பி இடம் எதற்காக இந்த போராட்டம் என்று பேசின பின் அந்த காவல் வாகனமும் டி எஸ் பி யும் அங்கிருந்து சென்றனர்.

சுர்ஜித் சௌதரி கூறும்போது, "ஊட்டி ரேஸ் கோர்ஸ் ஈரநிலத்தில் சுற்றுலா துறையால் சூழல் பூங்கா அமைப்பதற்கும் நகராட்சி நிர்வாகத்தால் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1993 ஆம் ஆண்டு மலை வாசஸ்தல கட்டிட விதிகளின் 5.5 ஆம் விதியை மீறுவதாக உள்ளது. ரேஸ் கோர்ஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 100 மீட்டர் வரையிலான எல்லைக்குள் எந்த கட்டுமானமும் அனுமதிக்கப்படாது .
தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட ஊட்டி பெருந்திட்டம் மாஸ்டர் பிளான் அத்தியாயம் 8 இன் கீழ் ரேஸ் கோர்ஸ்,ஊட்டி ஏரி மற்றும் தாவரவியல் பூங்காவின் பசுமையை பாதுகாக்க அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர்.
இந்த சூழல் பூங்கா அமைக்க மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி,1936 ஆம் ஆண்டு சுற்றுசூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஈரநில ஆணையத்தின் அனுமதி பெறவில்லை.
குதிரை பந்தய மைதான ஈரநிலத்தில் துவங்க இருக்கும் அனைத்து கட்டுமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஈரநிலப்பகுதி விதிகள் கண்டிப்பாக செய்யல்படுத்தவேண்டும்.
இந்த பகுதியை பாதுகாக்கபட்ட ஈரநிலமாக அறிவிக்கவேண்டும்.
ஊட்டி ஏரி மற்றும் ஈரநிலங்களுக்குள் செல்லும் கழிவு நீர் புகுவதை தடுக்க வேண்டும் .இந்த நிலத்தில் ஏதாவது கட்டுமான வேலைகள் துவங்கினால் என் மேல் புல்டவ்சரை ஏற்றி துவக்கட்டும். என்கிறார் ஆக்ரோஷமாக.
நீலகிரி சுற்றுசூழல் இயற்கை ஆர்வலர் மோகன்ராஜ் கூறும்போது,

" ஊட்டி அழகான ஈரநிலப்பகுதி அதிலும் குதிரை பந்தைய மைதானம் இந்த மலை மாவட்டத்தின் முக்கியமான சுவாச வளபகுதி ஆக இருக்கிறது. நிலத்தடி நீர் நிரப்பு, வெள்ளத்தடுப்பு மற்றும் சுற்றுசூழல் சமநிலை ஆகிய வற்றில் பெரும் பங்காற்றுகிறதது.
சுற்றுலாத்துறை முன்வைக்கும் சூழல் பூங்கா அமைக்கும் திட்டம், நகராட்சி முன்வைக்கும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் இந்த சுவாச இயற்கை அமைப்பை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.
இது நீலகிரி மலைகளின் மிக உயரமான ஈர நிலமாகும்.
நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் நீர் அமைப்பு இதை சார்ந்துள்ளது. இந்த நிலத்தில் ஏற்படும் பாதிப்பு அண்டை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்தை பாதிக்கும்.
ஈரநிலம் என்பது தனக்கே உரிய மண் தன்மை மற்றும் உயிர்வாழ்வை கொண்ட ஒரு பஞ்சு போன்ற நிலமாகும். இந்த உயிர்வாழ்வைக் கொல்லும் எந்த நடவடிக்கையும் நிறுத்தப்பட வேண்டும்.
ஊட்டி ரேஸ் கோர்ஸ் நிலமானது.
கமர்ஷியல் சாலை ஸ்டோன் அவுஸ் ஹில் மற்றும் எல்க் ஹில் பகுதியில் இருந்து வரும் மழைநீரைச் செரித்து ஒழுங்குபடுத்துகிறது.
மேகவெடிப்பு, மிக கன மழை ஏற்படும் சமயங்களில் இந்த நிலம் அதிகப்படியான நீரைத்தேக்கி ஒழுங்குபடுத்தி வருகிறது என்பது மறைமுக உண்மை !.
இந்த நிலத்தை தொந்தரவு செய்தால் வயநாடு, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட மிக பெரிய அழிவை போன்றது நடக்க வாய்ப்புள்ளது.
சென்னை பள்ளிக்கரணை ஏரியை போல ரேஸ் கோர்ஸ் மற்றும் ஊட்டி ஏரியை வனத்துறையிடம் ஒப்படைத்து பாதுகாப்பது அவசியம் ". என்கிறார் ஆவேசமாக.
இந்த போராட்டத்தில் 91 வயதான இயற்கை ஆர்வலர் லட்சுமி கலந்து கொண்டது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

லட்சுமி அம்மாவிடம் பேசினோம், " ஊட்டி ரொம்ப மோசமா ஆயிடுச்சி எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் தான். மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது,
இந்த ரேஸ் கோர்ஸ் ஒன்று தான் இயற்கையாக அழகாக நீர்ப்பிடிப்பு இடமாக உள்ளது சூழல் பூங்கா என்று இதை அழித்து விடாதீர்கள் இதற்காக போராட தான் நான் இங்கு வந்தேன் தேவையற்று கட்டுமானங்கள் எதுவும் செய்யாமல் அப்படியே விடுங்கள் குதிரை பந்தயமே நன்றாக இருந்தது " என்கிறார்.
ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் குதிரை பந்தயமே அழகாகவும் இந்த நிலம் பாதுகாப்பாக இருந்தது என்பது தான் உண்மை என்பது நீலகிரி வாசிகளின் கருத்து.

Leave a comment
Upload