
உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு உட்பட்ட சிக்ரா நகராட்சி அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் கால் முட்டி போட்டபடி தவழ்ந்து வந்து, தங்களின் கோரிக்கை மனுக்களை நகராட்சி அதிகாரிகளிடம் வழங்கினர்.
இதுகுறித்து 12 காங்கிரஸ் கவுன்சிலர்களும் கூறுகையில், ‘‘இந்த ஆண்டில் மட்டும் எங்களின் வார்டு பகுதி வளர்ச்சிக்காக ₹10 லட்சத்தை அரசு ஒதுக்கியது. எனினும், இதுவரை அங்கு வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை. உரிய நேரத்தில் வளர்ச்சி பணிகள் துவங்கவில்லை என்றால், பட்ஜெட்டில் ஒதுக்கிய பணம் மீண்டும் அரசுக்கே சென்றுவிடும். எங்களது வார்டு பகுதி வளர்ச்சி பணிகளுக்கு இதுவரை டெண்டர்கூட கோரப்படவில்லை.
இங்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், மாநில அரசால் ஒதுக்கப்பட்ட நிதி பயன்பாடின்றி மீண்டும் திரும்பி செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் கவுன்சிலர்களாகிய எங்களுக்குத்தான் மக்களிடையே அவப்பெயர் ஏற்படும். அதனால் இன்று நூதன முறையில் போராட்டம் நடத்தி, நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம்!’’ என்று வேதனை தெரிவித்தனர்.
இப்படி முட்டி போட்டு தவழ்ந்து வரும் ஸ்டைலைப் பார்த்தால் தமிழ்நாட்டு தலைவர் ஒருவர் உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லிட்டேன்.
மாலாஸ்ரீ

Leave a comment
Upload