
மிஸ்டர் ரீல் ராகுல் காந்தியை பார்க்க போன போது மத்திய பிரதேசத்தில் கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் ஒரு நகர கிராமத்தில் நடைபயணம் போய்க் கொண்டு கூடவே பிரியங்கா காந்தி இருந்தார். அப்போது அங்கு ஓடி வந்த எம்பி ஜோதிமணி "நீங்க ஒரு மணி நேரம் 23 நிமிஷம் நடந்திட்டிங்க ஒரு ரெண்டு மணி நேரம் ரெஸ்ட் எடுங்க என்று அவரை கேரவனுக்கு அழைத்துப் போக மிஸ்டர் ரீலும்கேரவன் நுழைந்தார்.
அவரது 40 நாள் தாடியை பார்த்த மிஸ்டர் ரீல் ...அஸ்ஸாம் முதலமைச்சர் "நீங்கள் சதாம் உசேன் போல் இருக்கிறீர்கள் என்று சொன்னது உண்மைதான் போலிருக்கிறது. உங்கள் தாடியை பார்த்தவர் அப்படி சொல்லிவிட்டார் போல் தெரிகிறது "என்று சொல்ல அப்போது ராகுல் காந்தி" இஸ்லாமியர்களின் மிகப்பெரிய தலைவர் சதாம் உசேன் இஸ்லாமியர் வாக்கு வங்கி எனக்கே என்பதைத் தான் அமித்ஷாவுக்கு சூசகமாக அசாம் முதல்வர் சொல்லியிருக்கிறார்" என்று சொல்ல உடனே பிரியங்கா "இந்த நடைப்பயணம் என் அண்ணனை எப்படி எல்லாம் யோசிக்க வைத்திருக்கிறது "என்று பெருமையாக சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் "இந்தியா முழுக்க பாஜக பக்கம் தான் காற்று வீசுது தமிழ்நாட்டிலேயே திமுகவே இப்படித்தான் சொல்லுது "என்று சொல்ல உடனே பிரியங்கா காந்தி காற்று வீசும் மழை பெய்யும் ஆனா ஓட்டு விழாது இலவசங்கள்ல எல்லாம் நாட்டை குட்டிச்சுவராக்குகிறது என்று பேசிய மோடி தனது தேர்தல் அறிக்கையில் 213 இடத்தில் இலவசம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம் 213 இலவச அறிவிப்புகளை பாஜக வெளியிட்டு இருக்கிறது என்று அர்த்தம். ஜி 20 மாநாடு முடிந்து நேராக குஜராத் தான் வந்தார் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது பள்ளிக்கூட பசங்களுக்கு பொதுத்தேர்வில் கணக்கு தேர்வில் 15 மார்க் இலவசம் என்றார். இன்னொரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது ஆங்கில பரீட்சையிலும் 20 மார்க் இலவசம் என்றார் "என்று பிரியங்கா சொல்ல அப்போது ராகுல் காந்தி" மோடி தெரு தெருவா போய் பிரச்சாரம் செய்கிறார்.
அமித்ஷா வீடு வீடா போய் ஓட்டு கேட்கிறார் அவங்களுக்கு எங்களை பார்த்து பயம் வந்துருச்சு" என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் "அவங்க ஆம் ஆத்மி கட்சி பார்த்து தான் பயப்படுறத செய்தி வந்தது "என்று சொல்ல அதற்கு ராகுல் காந்தி நாங்க இங்க பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி பற்றி எதுவும் பேசுவதே கிடையாது தாமரைக் கட்சி தான் அவங்கள பத்தி பேசுறாங்க அவங்க டெல்லியோடு சரி பஞ்சாப்ல இப்ப எலக்சன் நடந்த கூட நாங்க தான் ஜெயிப்போம். தவிர ஆம் ஆத்மி கட்சிக்கு தீகார் சிறையில் இருக்கிற அமைச்சருக்கு சாப்பாடு பீடா கொண்டு போய் தரத்துக்கு நேரம் சரியா இருக்கு பிரச்சாரத்துக்கு எல்லாம் அவங்களுக்கு டைம் இல்ல "என்று ராகுல் காந்தி சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் "நீங்க கூட தான் இலவச அறிவிப்புகளை சொல்லி இருக்கீங்க பேப்பர்ல பார்த்தேனே "என்று அதற்குப் பிரியங்கா காந்திநாங்க 198 இலவசங்கள் தான் சொல்லி இருக்கும் அவங்க அளவுக்கு இல்ல "என்று சொல்ல அப்போது ராகுல் காந்தி குஜராத் தேர்தலில் 35 பிஜேபி வேட்பாளர்களை எதிர்த்து 35 பிஜேபி காரங்க போட்டி போடுறாங்க அங்கெல்லாம் நாங்க ஜெயிச்சாச்சு இது பற்றி தேர்தல் கமிஷனிடம் பேசினேன் நீங்க சொல்றது உண்மைதான். ஆனால் தேர்தல் வாக்கு வாக்கு எண்ணிக்கை இப்படி ஒரு சிஸ்டம் இருக்கு இத நீங்க புரிஞ்சுக்கோங்க என்று அவர்கள் அவர்கள் சொன்னார்கள் இப்போதைக்கு குஜராத்தில் காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை "என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் அமித்ஷா போட்டி வேட்பாளர்கள் "15 பேரையும் தான் கட்சியை விட்டு நீக்கியதாக சொல்லி இருக்கிறார் "என்று சொல்ல அப்போது பிரியங்கா காந்தி அமித் ஷாஜி கணக்கில் கொஞ்சம் வீக் அவருக்கே அவர் கட்சி வேட்பாளர்களை இதற்கு எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்ற கணக்கு தெரியவில்லை "என்று சொன்னார்.
"அப்போது குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் அப்படித்தானே "என்று மிஸ்டர் ரீல் கேட்க"அதை நாங்கள் சொல்லக்கூடாது நாங்கள் சாதாரண தொண்டர்கள் கட்சித் தலைவர் கார்கே ஜி அவர்தான் சொல்லணும் கட்சி கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்"என்று ராகுல் காந்தி சொல்ல அப்போது பிரியங்கா காந்தி "ஆமா ஆமா ரொம்ப முக்கியம் "என்று சிரித்தபடியே வழிமொழிந்தார்.
அப்போது மிஸ்டர் ரீல் "ஆனால் கார்கே நான் ராகுல் காந்தி சொல்படி தான் நடப்பேன் என்று சொல்கிறாரே "என்று கேட்க அதற்கு ராகுல் காந்தி ஏதோ சொல்ல வர அவரை குறுக்கிட்டு பிரியங்கா காந்தி "மல்லிகார்ஜுன கார்கே ஜி ராகுல் காந்தி சொல்படி நடப்பேன் என்று சொன்னது வாக்கிங் பற்றி ராகுல் காந்தி இதுவரை 19,826 கிலோமீட்டர் நடந்திருக்கிறார். அவர் நடப்பதில் இப்போது ஒரு பெரிய எக்ஸ்போர்ட் ஆகையால் அவர் சொல்படி நடப்பேன் அதாவது அவர் சொல்லிக் கொடுத்த படி நடப்பேன் "என்கிறார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்றார் பிரியங்கா காந்தி அப்போது "ராகுல் காந்தி கட்சிக் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம் "என்று சொல்ல பிரியங்கா காந்தி மீண்டும் சிரித்தபடி "ஆமாம் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம் "என்றார்.
உடனே மிஸ்டர் ரீல் அப்ப இனிமே மாநில காங்கிரஸ் தலைவர் பிரதமர் வேட்பாளர் "இப்ப நீங்க சொல்றீங்களே குஜராத்தில் நாங்க தான் ஜெயிப்போம் அப்போ முதல்வர் வேட்பாளர் இது எல்லாமே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தான் முடிவு செய்வாரா நீங்க தலையிட மாட்டீங்களா " என்று கேட்க அதற்கு பிரியங்கா காந்தி ராகுல் காந்தி இருவரும்" நாங்க சாதாரண கட்சி தொண்டர்கள்" என்றார்கள் ஒரே குரலில் அப்போது மிஸ்டர் ரீல் அது இருக்கட்டும்" உங்கள் கட்சி ஆபீசில் வாசலில் இருக்கும் போர்டில் இன்னும் சோனியா காந்தி படம் தான் இருக்கு கட்சித் தலைவர் கார்கே படம் இல்லையே "என்று கேட்க அதற்குப் பிரியங்கா காந்தி "நீங்க கேட்ட அதே கேள்வியை நான் கட்சி ஆபீஸ் காவலாளிடம் ஏன் பெயர் பலகை இன்னும் மாறவில்லை என்று கேட்டேன் புதுசா ஒரு போர்டு தயார் செய்தோம் அந்த ஓவியர் கார்கே படம் வரைந்தால் அது உங்களை மாதிரி இருக்கிறது. எனவே இன்னொரு ஓவியரை வரைய சொன்னோம் அவர் வரைந்தால் அது ராகுல்ஜி மாதிரி இருக்கிறது புது தலைவர் ஜாடையில் அச்சு அசலாக வரைய ஓவியர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு யாராவது தெரியுமா என்று என்னிடமே கேள்வி கேட்டார்" என்று பிரியங்கா காந்தி சொல்ல அப்போது "ராகுல் காந்தி இந்தியா முழுவதும் உள்ள ஓவியர்களை அழைத்து கட்சி அலுவலகத்தில் கார்கே வரைய முயற்சி பயிற்சி எடுத்து வருகிறார்கள்"என்று சொல்ல அப்போது பிரியங்கா காந்தி கார்கே மூஞ்சி ரெடி என்றால் போர்டு ரெடி "என்றார் சிரித்தபடி அப்போது பிரியங்கா காந்தி செல்பேசி ஒலிக்க"கார்கேஜி நீங்க சொந்த ஊருக்கு போக ரெண்டு நாள் லீவு கேட்கிறீங்க இதுக்கெல்லாம் போய் என்கிட்ட பர்மிஷன் கேட்கலாமா நீங்க தாராளமா போயிட்டு வாங்க "என்று சொல்ல பிரியங்கா காந்தி "அவர் பாவம் காந்தி குடும்ப கட்டுப்பாட்டில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை போகப் போக சரியாகும் "என்றார் உடனே மிஸ்டர் ரீல் அதுக்கு இன்னும் எத்தனை நாள் ஆகும் என்று கேட்க ஒரு முப்பது வருடம் என்று பிரியங்கா காந்தி சொல்ல இல்ல ..இல்ல .....40 வருடம் என்று ராகுல் காந்தி சொன்னார் பாவம் மிஸ்டர் ரீல் ஒரு மாதிரி குழம்பி கிளம்பி வந்து விட்டார்.

Leave a comment
Upload