
மக்கள் பார்வையில் கம்பர்
ராமகாதை மொழிமாற்றம்
பற்றிக் கம்பர் வாய்மொழியாக
சென்ற முறை அறிந்தோம்
இக் காவியத்தைப் பல அறிஞர்
பெருமக்கள் இயற்றி இருக்கையில்
துளசிதாசர் போன்றோர்
இயற்றி இருக்கையில்
வால்மீகி பாடிய காவியத்தை
ஏன் மொழிமாற்றம் என நம்
அனைவரது மனதில் ஒரு
எண்ணம் தோன்றுவது இயல்பு
அதற்கு அவரே பாலகாண்டத்தின்
நாட்டுப் படலப் பாடலில் சுவைபட
மக்களுக்கு எளிதில் புரியும்படி
உரைக்கிறார்
வாங்க அரும் பாதம் நான்கும்
வகுத்த வான்மீகி அன்பான்
தீம்கவி செவிகள் ஆரத்
தேவரும் பருகச் செய்தான்
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை
அன்பு எனும் நறவம் மாந்தி
மூங்கியான் பேசலுற்றான் என்னை
யான் மொழியலுற்றேன்
வாங்க அரும் பாதம் நான்கும்
வகுத்த வான்மீகி அன்பான்
என்றால் எடுத்து விடுதற்கு
அரிய நான்கு அடி சுலோகங்களால்
ஆன இராமாயணம் இயற்றிய
வான்மீகி முனிவர் எனப் பொருள்
அன்பு எனும் நறவம் மாந்தி என்றால்
அன்பு எனும் மதுவைப் பருகி
மூங்கையான் பேசலுற்றான் எனில்
வாய் பேச இயலாத ஊமை
பேசத் தொடங்கியது போல எனப் பொருள்
வால்மீகி பாடிய நான்குஅடி
சுலோகத்தில் எந்த வரியும்
எடுத்து விட முடியாது அத்தனைப்
பொருத்தமானது கருத்துச்
செறிவு மிக்கது
தேவர்கள் செவி பருகச் செய்த
இக் காவியத்தை அன்பு எனும்
மதுவைப் பருகி வாய் பேச
இயலாத ஊமை பேச தொடங்கியதைப்
போல எல்லையற்ற மகிழ்வாய்
ராமகாதையை நான் எழுதத்
தொடங்குகிறேன்
என்று பாமர மக்களுக்கு எளிதில்
புரியும் படி எளிய உவமை நயமாய்
கவிநயம் பாடிய கவிக்கம்பரை
போற்றுவோம்
பாராட்டுவோம்....

Leave a comment
Upload