பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றன.
பள்ளி , கல்லூரி மற்றும் வேலை செய்யும் இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் நிலை தொடர்கிறது . ஒரு கதை முடியும் முன்பே வேறொரு கதை தொடங்குவது போல , ஒரு வன்முறைச் சம்பவத்தை மறக்கும் முன்பே, வேறொரு சம்பவம் வந்து நம்மை நிலை குலைய வைக்கிறது
இந்த வாரத்தில் சென்னை சிட்லப்பாக்கத்தில் , அரசின் சமூகநலத்துறையால் நடத்தப்படும் மாணவியர் விடுதியில் தங்கிப் படிக்கும் 13 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் . எட்டாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவியை அவ்விடுதியின் காவலாளியே கொடுமைப்படுத்தி உள்ளார் என்பதை அறியும் போது மனம் பதைத்துப் போகிறது.
இந்த ஞாயிறன்று மாணவி காலையில் எழுந்து வந்த போது ,அவள் முகத்தில் கையை வைத்து அழுத்தி மயக்கமடைய வைத்து தொந்திரவு கொடுத்துள்ளான் அவன் . முகம் மற்றும் கால்களில் காயங்களுடன் ஏற்பட்டதுடன் கால்களில் முறிவும் ஏற்பட்டுள்ளது . அச்சிறுமி எழுப்பிய குரலில் பிற மாணவிகள் வருவதை பார்த்து அக்குற்றவாளி தப்பி ஓடி விட்டான்.
அப்பெண்ணை கீழே விழுந்து கால் முறிந்து விட்டது என்று சொல்லி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அப்பெண்ணே தனக்கு நடந்ததை தைரியமாக சொன்ன பிறகே ,அது பாலியல் வன்கொடுமை வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையில் விடுதி கேமராவை அலசிய போது அந்தக் குற்றத்தில் ஈடுபட்டவன் அங்கு காவலாளியாக பணி செய்யும் ஐம்பது வயதான மேத்யூ என்பவன் என்று உறுதி செய்தனர் காவல் துறையினர். அவனைக் கைது செய்து போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
வேலியே பயிரை மேய்வது போல , ஒரு காவலரே இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக் கொள்வது எவ்வளவு துணிகரமான செயல் ? பிடிபட்டால் தண்டனை உறுதி என்ற பயமும் இன்றி, மகள் அல்லது பேத்தி வயதுள்ள சிறுமியிடம்,கால்கள் உடையும் அளவுக்கு மிருகத்தனமாக நடந்துக் கொள்ளும் மனிதனை என்ன வகையில் சேர்ப்பது ?
அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் இலவச விடுதிகளில் தங்கிப் படிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கு எவ்வித பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அங்கு பணி புரியும் ஊழியர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள் ?
சில மாதங்களுக்கு முன் மதிய உணவில் 'முட்டை தரவில்லையா?' என்று கேட்ட மாணவனை விளக்குமாறால் , பள்ளி பெண் ஊழியர் தாக்கிய சம்பவம் நினைவுக்கு வருகிறது .
இனி மாணவியர் தங்கும் விடுதிகளில் பெண் காவலர்கள் நியமிக்கப் படுவார்கள் என்று அமைச்சர் கூறி உள்ளார். ஆண் , பெண் என பாதுகாப்பு பொறுப்பில் யாராக இருந்தாலும் அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும். சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராகவும் இருக்க வேண்டும்..
மாணவ மாணவியரிடம் உண்மையான கனிவும் , அக்கறையும், கண்டிப்பும் காட்டுபவராக இருக்க வேண்டும் . அவ்வப்போது அதிகாரிகள் அவர்களின் நடவடிக்கைகளை ஆராயவேண்டும் . மாணவியர்களின் குறைகளைச் செவி கொடுத்து கேட்டு களைய வேண்டும். புகார் /ஆலோசனை பெட்டிகளை ஒவ்வொரு பள்ளி மற்றும் விடுதிகளில் வைக்க வேண்டும் .
பாதுகாப்பு என்று வரும் போது எவ்வித சமரசமும் இருக்க கூடாது. வெளியில் இருந்து வரும் ஆட்கள் , விடுதியில் உள்ளவர்கள் என எல்லோருக்கும் கடுமையான திட்டங்களைத் தீட்ட வேண்டும் . சமூகநலத்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து இந்த ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையார்களுக்கு என்று விதி முறைகளை ஏற்படுத்தி , அவை பின்பற்றப்பட்டப் படுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.
ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளே இந்த இலவச விடுதிகளில் தங்குகிறார்கள் .அவர்கள் நலத்துக்கும் , பாதுகாப்புக்கும் விடுதி மேற்பார்வையாளர்களே பொறுப்பு . உணவு தயாரிப்பவர் முதல் விடுதி காவலாளி வரை. பொறுப்பாளர்கள் என எல்லோருக்கும் சரியான இடைவெளிகளில் பாதுகாப்பு , சுகாதாரம் பற்றி பயிற்சி பட்டறைகளை (Motivational Workshop ) நடத்த வேண்டும் . மாணவியருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .
தண்டனைகள் கடுமையாக்கினால் மட்டுமே குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு . பணியிட மாற்றம் , பணி இடை நீக்கம் என்ற கண்துடைப்பு நாடகங்களை நிறுத்தி , குற்றவாளிகளைச் சிறையில் தள்ளுங்கள் .குற்றவாளிக்குமரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்!
Leave a comment
Upload