விநாயகரை வரைவது தான் சுலபமான முதல் விஷயம் என்கிறார் மீனா சிவராமன் அயர்லாந்திலிருந்து.
நாம் எப்படி எழுதத் துவங்கும் போது உ என்று பிள்ளையார் சுழி போட்டு விட்டு எழுதுவோமோ... அது போலவே ஒரு தும்பிக்கைக்கு ஒரு கோடு போட்டு விட்டாலே, பிள்ளையார் மனதில் வந்து உட்கார்ந்து தன்னைத் தானே வரைந்து கொள்வார்.
மற்ற சாமி படங்களை வரைவது சிரமம். அதற்காக நிறைய மெனக்கட வேண்டும்.
ஆனால் விநாயகரை ஒரு சில கோடுகளில் வரைந்து விடலாம்.
தும்பிக்கையைப் பார்த்தவுடனே எல்லோருக்கும் வரைவதற்கு ஒரு நம்பிக்கை பிறந்து விடும் என்கிறார் மீனா சிவராமன்.
சமீபத்தில் அயர்லாந்திற்கு குடி போயிருக்கும் மீனா, அங்கிருக்கும் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு படம் வரையக் கற்றுக் கொடுத்தது சிலிர்ப்பான அனுபவம் என்கிறார்.
சில நிமிடங்களும், சில பல கோடுகளும் பிள்ளையார் வந்து விடுவாராம்.
- ராம்
Leave a comment
Upload