ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதம் பற்றி எல்லா நாடுகளுக்கும் உண்மை நிலையை எடுத்து சொல்ல பாராளுமன்ற குழு உறுப்பினர்களை மத்திய அரசு அனுப்பி இருக்கிறது. இதில் பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்யும் கனிமொழி ஒரு குழுவின் தலைவர். ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் ஒவைசி .இவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சில சமயம் பேசியிருக்கிறார். பாரதிய ஜனதாவை பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சனம் செய்பவர். இவரும் இப்போது ஒரு குழுவில் இணைக்கப்பட்டு அரபு நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். அங்கு பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்து இந்தியாவுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். ஓவைசி கனிமொழியும் ரஷ்யாவில் இந்தியாவின் நடவடிக்கையை பாராட்டியும் பாகிஸ்தானை விமர்சனம் செய்தும் ரஷ்யா நாட்டு அமைச்சர்களிடம் விளக்கி இருக்கிறார். மொத்தம் ஆறு குழுக்கள் அனுப்பப்பட்டன. இவற்றில் பெரும்பாலும் முக்கியமான எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் தந்து அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களும் கட்சி அரசியல் பார்க்காமல் நாடே முக்கியம் என்று நம் நாட்டிற்கு ஆதரவாக வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் பேசியிருக்கிறார்கள். நாட்டுப் பிரச்சனையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை உலகுக்கு மோடி எடுத்துச் சொல்லி இருக்கிறார் என்று தான் நாம் பார்க்க வேண்டும். இது நல்ல விஷயம் தான் வரவேற்போம்.
Leave a comment
Upload