திமுக கூட்டணி ராஜ்யசபா உறுப்பினர்கள் வில்சன் , வைகோ, புதுகை அப்துல்லா, சண்முகம், அதிமுக உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகிய ஆறு பேர் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைவதை தொடர்ந்து ஆறு காலியிடங்களுக்கு ஜூன் 19ம் தேதி தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
திமுகவைப் பொறுத்தவரை கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டாம் திமுக கூட்டணிக்காக நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள் உங்களுக்கு ராஜ்யசபா வாய்ப்பு வழங்கப்படும் என்று மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசனுக்கு எழுதியே தந்தது திமுக.
நடுவே இந்தப் பதவிக்கு ஹிந்து ராம் ஆசைப்பட்டார் என்பது உப செய்தி.
திமுக ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை மக்கள் நீதி மையத்துக்கு ஒதுக்குகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
விஜய் திமுகவுக்கு எதிராக ரொம்பவும் பேசுகிறார். அவரை எதிர்த்து மூத்த நடிகரான கமலை வைத்து சமாளிப்போம்.
தேர்தல் பிரச்சாரத்தின் போதும் கமலஹாசனை விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேச வைப்பது என்று திட்டமிட்டு இருக்கிறது திமுக.
இது பற்றி எல்லாம் உதயநிதி கமலிடம் ஏற்கனவே பேசி அவர் சம்மதமும் பெற்று இருக்கிறார்.
கமல் ,விஜய் பற்றி எதுவும் கருத்து சொல்லவில்லை.
அவர் எப்போது பேச வேண்டும் என்ன பேச வேண்டும் என்பதையெல்லாம் உதயநிதி முடிவு செய்வார் என்பது திமுகவின் திட்டம் என்கிறது அறிவாலயம் வட்டாரம்.
கமல் ,விஜயை எதிர்த்து பிரச்சாரம் செய்தால் விஜய் நிலைப்பாடு என்ன என்று விசாரித்த போது களத்தில் யார் எதிரி என்பதுதான் முக்கியம் அவர் மாமனா, மச்சானா என்றெல்லாம் நம்மால் பார்க்க முடியாது என்கிறது விஜய் தரப்பு.
விஜயை எதிர்த்து பெரிய அளவில் திமுக கருத்து சொல்லாமல் மௌனம் சாதிக்கிறது.
கமலை வைத்து விஜயை சமாளிக்க முடிவு செய்து இருக்கிறது திமுக போகப் போக விஜய் கமல் மோதல் பெரிதாகும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் , வெயிட் அண்ட் சீ தான் இப்போது !
Leave a comment
Upload