நீலகிரி மாவட்டத்தில் வருடந்தோறும் இரண்டு பருவ காற்று மழையின் தாக்கம் இந்த மாவட்ட வாசிகளுக்கு பழகின ஒன்றாக இருந்தாலும்
வருடந்தோறும் மழை வெளுத்து வாங்கும் பொழுது நடுக்கம் ஏற்படுவது சகஜம் .
வழக்கமாக மே மாதம் இறுதியில் தான் தென் மேற்கு பருவ மழை துவங்கும் கேரளாவில் .
வானிலை அறிவிப்பு இந்த வருடம் சற்று வித்தியாசமாக இருந்தது .
மே 13 ஆம் தேதியே முன்னதாக அந்தமான் நிகோபார் தீவு கடற்கரையில் துவங்கும் .
ஸ்லொவ் மோஷனில் தான் மழை வரும் என்றிருந்த நீலகிரி வாசிகளை பயமுறுத்தியது .
மே 12 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஊட்டி வருவதற்கு முன்னதாகவே மழை கொட்டித்தீர்த்தது .
இந்த வருடம் தென் மேற்கு பருவமழை முன்னதாக துவங்கி,தினமும் மழை ஊட்டியில் அதிகரித்தது .
முதல்வர் ஊட்டியில் இருந்த அனைத்து நாட்களும் தொடர் மழை தான் .
சுற்றுலா பயணிகளின் வருகை நீலகிரியை மொய்த்து கொண்டிருந்தது .
23 ஆம் தேதி மழை வெளுத்து வாங்கியது 24 ஆம் தேதி ரெட் அலர்ட் என்ற அறிவிப்பு வர கலெக்டர் உடனே மாநில பேரிடர் மேலாண்மை படையை வரவழைத்து உஷாரானார் .
பொட்டானிக்கல் கார்டன் ,படகு இல்லம் ,தொட்டபெட்டா சிகரம்,பைக்காரா , ஷூட்டிங் ஸ்பாட் ,பைன் பாரஸ்ட் என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை மூடினார் கலெக்டர் .
25 ஆம் தேதி பயங்கர காற்று அடிக்க மரங்கள் விழுந்தன .
சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்க பொட்டானிக்கல் கார்டனில் மலர் காட்சி பரிசளிப்பு நடக்க அதிர்ச்சி தகவல் வர அதிர்ந்தனர்.
கேரளா கோழிக்கோட்டில் இருந்து வந்த சுற்றுலா பயணி குடும்பம் அபாயத்தை உணராமல் பையன் பாரஸ்ட் உள்ளே செல்ல மரம் முறிந்து விழ சிறுவன் ஆதிதேவ் தலையில் அடிபட்டு இறந்தது தான் சோகம் .
ஊட்டி மற்றும் கூடலூரில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட அங்கு வசித்த குடியிருப்பு வாசிகள் தற்காலிக முகாமில் தங்கவைத்து உணவு வழங்க பட்டது .
மாவட்ட எம் .பி .ஆ .ராசா பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு உதவிகளை செய்தார் .
28 ஆம் தேதி ஊட்டி கூடலூர் சாலையில் நடுவட்டம் அருகில் நிலச்சரிவு ஏற்பட்டது .
தவளை மலை அருகில் இருந்து மலை உடைந்து விழும் அபாயம் ஒரு ராட்ச பாறை விழும் தருணத்தில் உள்ளது .
பாறைகள் உருண்டு விழும் என்பதால் உடனடியாக கலெக்டர் கனரக வாகன போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தினார் .
ரெட் அலர்ட் விலகும் வரை சுற்றுலா தலங்கள் மூடியிருக்கும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார் கலெக்டர் .
பருவநிலை மாற்றத்தால் வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் கொட்டி தீர்த்தால் ஊட்டி திக்குமுக்காடி போனது.
Leave a comment
Upload