கிராமத்தில் தன் வீட்டில் உள்ள அஞ்சாறு பசுக்கள் மூலம் பால் கறந்து அதிலிருந்து தயிர், வெண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வந்தான் கோபாலன்.
“அவன் மனைவி ராதா “ஏங்க நீங்க கொண்டு போய் விற்கிற வெண்ணெய் நம்ம கிராமத்தில் விக்காது. பேசாம பக்கத்து டவுனுக்குக் கொண்டு போய் வித்துட்டு வாங்க; நமக்கு வருமானமும் நல்லா கிடைக்கும்.”
.”அதுவும் நல்ல ஐடியா தான். இந்தச் சின்னக் கிராமத்தில் நம் வெண்ணெய் போனி ஆகறது சிரமம் தான்”.
“ஆனா இப்படியே கொண்டு போய் வித்தா சரியா வாரது.ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சுத்திக் கொடு நான் வித்துட்டு வரேன்.”
இரண்டு பேரும் அதிகம் படித்தது இல்லை. ஆனால் நேர்மையான வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
பரம்பரையா இந்த வியாபாரம் தான். முன்பெல்லாம் உள்ளூர் கடையிலும், வழக்கமா வாங்கும் சில வீடுகளிலும் வாடிக்கை இருக்கும். ஆனால் இப்போது அப்படியில்லை.
இந்த மாற்று யோசனை தோன்றவே அதை முறைப்படுத்த நினைத்தார்கள் .இருவரும்
மறு நாள் கிட்டதட்ட 10 கிலோ வெண்ணெய். அத்துடன் தயிர் மற்றும் பால் தயாராக
ஒவ்வொன்றும் உத்தேசமாக 1 கிலோ எடை கொண்டதாக ஆக்கி கொண்டான்.. கோபாலன்.
நகரத்தில் ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி ,”இது வீட்டிலே சுத்தமா தயார் செஞ்ச பசு வெண்ணெய் ,பசும் பால் ,பசும் தயிர் உடம்புக்கு நல்லது என்று சொல்லி கடைகளில் கொடுக்க முயற்சித்த போது அவர்கள்.
“லோக்கல் வெண்ணெய் தயிர் பால் யாருப்பா வாங்குவாங்க?. பிராண்டட் ஐட்டம் தான் விற்பனை ஆகும். நீ வேற இடம் பாரு” என்று விரட்டி அடித்தார்கள்.
மணி மாலை ஆறு நெருங்கியது வியாபாரம் ஆகாமல், மிகவும் சோர்வுடன் இருந்த கோபாலன் கடைசி வாய்ப்பாக அந்தக் கடைக்காரரிடம் விஷயத்தைச் சொல்லுவோம் என்று அந்தக் கடைக்காரரை அணுகினான்.. அது ஒரு புறநகரில் அமைந்து இருந்தது.
“நான் உன் வெண்ணெயை வாங்கிக்கொள்கிறேன் .எனக்குப் பசு வெண்ணெய் பால் தயிர் மகிமை தெரியும் .”
.கோபாலன் சந்தோசமானன்.
“ இத பாருப்பா! மார்கெட் விலையை விட 30 சதவீதம் டிஸ்கவுண்ட் போட்டு குடு. இன்னொன்று பணமா நான் தர முடியாது.”
வேண்டுமென்றால் பொருள்களாக வாங்கி ஈடு கட்டிக்கொள் சரியா? என்றார் அந்தக் கடைக்காரர்.
பொருள்களைக் கொடுத்துவிட்டு, தன் குடும்பத்திற்குத் தேவையான டீ, சர்க்கரை, எண்ணெய் மற்றும் மளிகைபொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான் கோபாலன்..
ராதா சந்தோசமா காணப்பட்டாள்.வீட்டுக்கு மளிகை பொருள்கள் சக்கரை வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது .
“.நீங்க வார வாரம் அதே கடையிலே கொடுங்க.”
கோபாலன் சென்றபின், கடைக்காரர் வெண்ணெய் உருண்டைகளை ஒவ்வொன்றாகக் குளிர்சாதன பெட்டியில் போட்டு வைத்திருந்து விற்றுக் கொண்டிருந்தார்.
இப்படியே வார வாரம் வெண்ணெயைகொடுப்பதும் அதற்கு ஈடாக மளிகை பொருட்கள் சக்கரை எண்ணெய் வாங்கி க்கொண்டு இருந்தான் கோபாலன்.
திடீரென ஒரு நாள் கடைக்காரர் வெண்ணெய் எடை சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்க்கலாம் நாமும் இந்நாள் வரை அவன் பேச்சை நம்பி வாங்கிக் கொண்டோம் என்று நினைத்து வெண்ணெய் கவரை எடைபோட்டபோது, வெண்ணெய்யின் எடை உண்மையில் 1 கிலோ இல்லை, ஆனால் ஒவ்வொன்றும் 950 கிராம் என்று இருப்பதைப் பார்த்தார்.
அடுத்த வாரம், கோபாலன் மீண்டும் அதே கடைக்கு வெண்ணெய் விற்கச் சென்ற பொழுது.
கடைக்காரர் கோபாலனை பார்த்து , "எனது கடையை விட்டு வெளியேறு" இனி வெண்ணெயை கொண்டு வராதே “என்று கத்தினார்.
“ஒரு , நேர்மையற்ற ஏமாற்றுக்காரருடன் வியாபாரம் செய்தது பெரிய தவறு . இனி என் கடையில் கால் வைக்காதே”.
950 கிராம் வெண்ணெய்யை 1 கிலோவாக விற்கும் ஒரு தில்லு முல்லுகாரன் முகத்தை நான் பார்க்க விரும்பவில்லை.”
கத்திக்கொண்டு இருந்தார் கடைக்காரர்.
கோபாலனுக்கு அவமானமாகப் போனது.
கொஞ்ச நேரம் அங்கேயே நின்றவன். வாடிக்கையாளர்கள் இல்லாத நேரம் பார்த்துக் கடைக்காரரிடம் பணிவும் நடுங்கும் குரலில், “அய்யா “என்னிடம் தயவுசெய்து கோபப்படாதீங்க ?”
உண்மையில், நான் மிகவும் ஏழை . தராசு வாங்க கூட என்னிடம் பணம் இல்லை.”
“அதனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் கொடுக்கும் சர்க்கரை பாக்கெட்டை கொண்டு அதை தராசின் ஒரு பக்கத்தில் வைத்து, மறுபுறம் வெண்ணெய் அளந்து இரண்டும் சமமாக இருக்கும் போது பேக் செய்வேன். அதைத் தான் ஒவ்வொரு வாரமும் உங்களிடம் கொடுத்துள்ளேன்”.
தவற்றை உணர்ந்த கடைக்காரர், கண்ணகியின் சொல் கேட்ட பாண்டிய மன்னன் போல துடிதுடித்துப் போனார். தடாலென கோபாலன் காலில் விழுந்து கேட்டார் மன்னிப்பு !!!
Leave a comment
Upload