விநாயக சதுர்த்திக்கு (15.09.2026) மறுநாள்.
மேற்கு மும்பை புறநகர் பகுதிகளில் உள்ள கண்பதிகளை தரிசனம் செய்யக் கிளம்பினேன்.
பார்த்த சில கண்பதிகளின் புகைப்பட ஆல்பம்.
தெல்லி கல்லி கண்பதி.
பிறைச்சந்திரனை தேராக்கி அதன்மீது அமர்ந்துகொண்டு மூன்று கலைமான்கள் இழுக்கின்றன.

குந்தவளி கண்பதி.
நான்கு புஜங்களோடு அமர்ந்த நிலையில் இருக்கிறார்.

கார்ச்சா ஸ்ரீமந்த் கண்பதி. வாராஹி அம்மன் பின்னிருந்து கண்பதியை ஆசீர்வதிப்பது போன்றிருக்கிறாள்.

மேற்கு கார் ரோட் பகுதியில் மேற்கு புறநகர் ரயில் நிலயம் அருகேயிருக்கும் கண்பதி இதோ கீழே: அசுரர்களுடன் போரிடுகிறார். 
சஹார் ரோட் கண்பதி. அன்னப்பறவை மீது வீணை வாசித்தபடியே கண்பதி

மேற்கு கோரேகாவ் பகுதியில் காக்காஜி நகர்ச்சா ராஜா. மயிலிறகினால் கண்பதி

நட்வர் நகர் பகுதி கண்பதி. சங்கு சக்கரதாரியாக சதுர்புஜ கண்பதி மராட்டிய தலைப்பாகையோடு.

குதிரையில் சவாரி செய்யும் கண்பதி.

பம்ப் ஹவுஸ் கணேஷ்வாடி கண்பதி. திரிசூலமும் பரசும் ஏந்தியிருக்கிறார். 20 அடி உயரம்.

அங்கேயே முகப்பில் குகைக்குள் இருப்பது போல் பந்தலமைப்பில் கண்ணாடியில் தன்னைக்காணும் சிவலிங்கம் இதோ.

இடைப்பட்ட சொசைடியில் கண்பதிகள் சில இதோ கீழே.


இடதுகால் தூக்கிவைத்தபடி கண்பதி அமர்ந்திருக்கிறார்.

கணபதி தான் கண்டிஷன் போடாத கடவுள். அவரை எப்படி வேண்டுமானாலும் அலங்கரித்து, உருவகப்படுத்தி ஆசையாசையாக வழிபடலாம்.
கண்பதி பப்பா மோரியா!!! மங்கல் மூர்த்தி மோரியா!!!

Leave a comment
Upload