தொடர்கள்
பொது
நாட்டு நலப்பணி திட்ட நாள் - பா.நூருல்லாஹ்

20260818202733547.jpg

“தனக்காக வாழ்வது வாழ்க்கை பிறருக்காக வாழ்வது வரவாறு” என்றஉயர்ந்த சிந்தனையை நடைமுறைப்படுத்தும் சிறப்பான அமைப்பாக நாட்டு நலப்பணிதிட்டம் விளங்குகிறது. கல்வி என்பது பாடப்புத்தகங்களைப் படித்து மதிப்பெண்பெறுவது மட்டுமல்ல. சமூகத்தைப் புரிந்து கொண்டு சமூகத்தின் தேவைகளை உணர்ந்துமக்களுக்குப் பயனுள்ள பணிகளைச் செய்வதையும் உள்ளடக்கியதாகும்.

மாணவர்களின் அறிவு, ஆற்றல், நேரம் ஆகியவற்றை நாட்டின்வளர்ச்சிக்கும் சமூக நலனுக்கும் பயன்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன்நாட்டு நலப்பணி திட்டம் செயல்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 24ஆம் நாள்நாட்டு நலப்பணி திட்ட நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாள், சமூக பொறுப்பு, சேவைமனப்பான்மை, ஒற்றுமை, மனிதநேயம் ஆகியவற்றை மாணவர்களிடம் வளர்க்கும்முக்கியமான நாளாகும்.

இந்தியாவில் மாணவர்களின் கல்வியை சமூக சேவையுடன் இணைக்கவேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதன் அடிப்படையில்1969ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் நாட்டு நலப்பணி திட்டம் தொடங்கப்பட்டது.மகாத்மா காந்தியின் “சமூகத்திற்குச் சேவை செய்வதன் மூலம் நாட்டிற்கு சேவைசெய்யலாம்” என்ற கருத்தை நடைமுறையில் கொண்டு வருவதும் இதன் முக்கியநோக்கமாக அமைந்தது.

தொடக்கத்தில் சில கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டஇத்திட்டம், பின்னர் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்விரிவடைந்தது. இன்று மாணவர்களின் சமூக விழிப்புணர்வையும் தலைமைத்துவத்திறனையும் வளர்க்கும் முக்கியமான மாணவர் இயக்கமாக NSS திகழ்கிறது.

20260818202759854.jpg

நான் அல்ல நீ – NSS ன் உயர்ந்த கொள்கை

நாட்டு நலப்பணி திட்டத்தின் மிக முக்கியமான முழக்கம்

Not Me But You – நான் அல்ல, நீ

இந்த ஒரு வரியிலேயே NSS ன் முழு தத்துவமும் அடங்கியுள்ளது. தனிப்பட்ட நலனைமட்டுமே கருத்தில் கொள்ளாமல், பிறரின் நலனையும் எண்ண வேண்டும் என்பதே இதன்பொருள். எனக்கு என்ன கிடைக்கும்? என்ற கேள்விக்குப் பதிலாக என்னால்மற்றவர்களுக்கு என்ன கிடைக்கும்? என்று சிந்திக்கத் கற்றுத் தருவதே நாட்டு நலப்பணிதிட்டத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.

செப்டம்பர் 24ஆம் நாள் வெறும் விழா நாளாக மட்டும் பார்க்கப்படக்கூடாது. மாணவர்கள் தங்களுடைய சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதற்கானஒரு நாளாக அமைகிறது. இந்த நாளில் NSS மாணவர்கள் உறுதிமொழிஎடுத்துக்கொள்வது, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, தூய்மைப் பணிகளில்ஈடுபடுவது, மரக்கன்றுகள் நடுவது, இரத்ததானம் மற்றும் சுகாதார விழிப்புணர்வைஏற்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம்மாணவர்களுக்கு புத்தக அறிவுடன் சமூக அனுபவமும் கிடைக்கின்றன.

மாணவர்கள் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களிடம்இருக்கும் ஆற்றலை சரியான பாதையில் பயன்படுத்தினால் சமூகத்தில் மிகப்பெரியமாற்றத்தை உருவாக்க முடியும்.

NSS மாணவர்கள் மேற்கொள்ளக்கூடிய பணிகள் பலவாகும்.

• பள்ளி மற்றும் பொது இடங்களைத் தூய்மைப்படுத்துதல்

• மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்

• நீர்நிலைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

• போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

• சாலைப் பாதுகாப்பு குறித்து மக்களிடம் எடுத்துரைத்தல்

• கல்வியின் அவசியத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

• பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

• உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

• பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளில் உதவுவது

• இரத்தானம் மற்றும் மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்தல்

• பின்தங்கிய மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல்

இத்தகைய பணிகள் மாணவர்களிடம் இரக்க உணர்வையும் பொறுப்புணர்வையும்வளர்க்கின்றன.

நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் மாணவர்களிடம் வலியுறுத்தப்படும்முக்கியமான கருத்துகளில் ஒன்று தூய்மை. “என் வீடு மட்டும் தூய்மையாக இருந்தால்போதும்” என்ற எண்ணத்தை மாற்றி “என் தெரு, என் பள்ளி, என் கிராமம், என் நகரம்தூய்மையாக இருக்க வேண்டும்” என்ற எண்ணத்தை வளர்ப்பதே சமூக சேவையின்நோக்கமாகும்.

குப்பைகளை முறையாகப் பிரித்துப் போடுதல், பிளாஸ்டிக்பயன்பாட்டைக் குறைத்தல், பொது இடங்களைச் சுத்தமாக வைத்தல் போன்றபழக்கங்களை மாணவர்கள் முதலில் தங்களிடம் ஏற்படுத்திக் கொண்டு, பின்னர்மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இன்றைய உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றுசுற்றுச்சூழல் பாதுகாப்பு. காடுகள் அழிக்கப்படுதல், நீர்நிலைகள் மாசுப்படுதல், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்தல், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் மனிதவாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்றன. இதனை உணர்த்தும் வகையில் NSS மாணவர்கள் மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், பிளாஸ்டிக் ஒழிப்புவிழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

ஒரு மாணவர் நடும் ஒரு மரக்கன்று, நாளைய தலைமுறைக்குநிழலாகவும் உயிர்க்காற்றாகவும் மாறுகிறது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதுஒரு நாள் நிகழ்ச்சி அல்ல, அது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய பொறுப்பாகும்.

நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பான அம்சங்களில் ஒன்று கிராமப்புற மக்களுடன்மாணவர்களை நேரடியாக இணைப்பதாகும். கிராமங்களில் சிறப்பு முகாம்கள்நடத்தப்பட்டு, சுகாதாரம், கல்வி, தூய்மை, சுற்றுச்சூழல், பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் மாணவர்கள் சமூகத்தின் உண்மையான வாழ்க்கையைப்புரிந்துகொள்கின்றனர். புத்தகத்தில் படித்த வறுமை சமத்துவமின்மை சுகாதாரம் கல்விபோன்ற சொற்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையான வாழ்க்கையை அவர்கள்நேரடியாகக் காண்கிறார்கள். அந்த அனுபவமே அவர்களை நல்ல குடிமக்களாகஉருவாக்குகிறது.

NSS என்பது சமூகத்திற்குச் சேவை செய்வதற்கான திட்டம் மட்டுமல்ல, மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பயிற்சிக் களமாகும். NSS நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் மாணவர்களிடம் தலைமைத்துவம், குழுமனப்பான்மை, நேர மேலாண்மை, தொடர்புத் திறன், முடிவெடுக்கும் திறன், பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன், பொறுமை, ஒழுக்கம், தன்னம்பிக்கை போன்றபல்வேறு பண்புகள் வளர்கின்றன. ஒரு மாணவன் சமூகத்துடன் தொடர்புகொள்ளும்போது, அவன் உலகைப் பார்க்கும் பார்வையும் விரிவடைகிறது.

வெள்ளம், புயல், வறட்சி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப்பேரிடர்கள் ஏற்படும் காலங்களில் சமூகத்திற்கு உதவும் மனிதவளமாக NSS மாணவர்கள் செயல்பட முடியும். நிவாரணப் பொருட்களைச் சேகரித்தல், உணவுவழங்குதல், மக்களுக்கு தேவையான தகவல்களைப் பரப்புதல், தூய்மைப் பணிகளில்உதவுதல் போன்ற பணிகள் சமூகத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பொறுப்பைவெளிப்படுத்துகின்றன. பேரிடர் காலங்களில் “யார் உதவுவார்கள்?” என்றுகாத்திருப்பதைவிட “என்னால் என்ன உதவி செய்ய முடியும்?” என்று கேட்பதேஉண்மையான நாட்டு நலப்பணி மனப்பான்மையாகும்.

மாணவர்கள் சமூகத்தின் மிகப்பெரிய மாற்றும் சக்தியாக இருக்கிறார்கள். அவர்கள்தங்களது குடும்பத்திலும் நண்பர்கள் வட்டத்திலும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியும். ஒரு NSS மாணவர் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கச் சொன்னால், அதுஒரு குடும்பத்தையே மாற்றக்கூடும். ஒரு மாணவர் மரம் நடுவதன் அவசியத்தைஎடுத்துரைத்தால், பலா் மரக்கன்றுகளை நடத்தொடங்கலாம். ஒருவர் கல்வியின்முக்கியத்துவத்தை உணர்த்தினால், ஒரு குழந்தையின் வாழ்க்கையே மாறக்கூடும்.

எனவே சமூக மாற்றம் பெரிய மேடைகளில் மட்டுமே தொடங்குவதில்லை, அது ஒருமாணவனின் சிறிய செயலிலிருந்தும் தொடங்கலாம்.

NSS நாளில் விழா நடத்தி உரையாற்றுவதோடு கடமை முடிந்துவிடக்கூடாது. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் அந்த நாளை ஒரு சமூகச் செயல்பாட்டின்தொடக்க நாளாகக் கருத வேண்டும். மாணவர்கள் குறைந்தது ஒரு நல்ல சமூகப்பணிடைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்

ஒரு மாணவர் – ஒரு மரம்

ஒரு மாணவர் – ஒரு சமூக விழிப்புணர்வு

ஒரு மாணவர் – ஒரு நல்ல மாற்றம்

போன்ற செயல்திட்டங்களை உருவாக்கலாம். அதிலும் முக்கியமாக சேவை என்பதுபுகைப்படம் எடுப்பதற்கான நிகழ்ச்சி அல்ல, மற்றவர்களின் வாழ்க்கையில்உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்றைய இளைஞர்களே நாளைய நாட்டை வழிநடத்தப்போகிறார்கள். அறிவும் திறமையும் கொண்ட இளைஞர்கள் சமூகப் பொறுப்புடன்வளரும்போது மட்டுமே நாடு உண்மையான முன்னேற்றத்தை அடையும். தொழில்நுட்பவளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவை மட்டும் நாட்டின் வளர்ச்சிக்கானஅளவுகோல்கள் அல்ல. மக்கள் ஒருவருக்கொருவர் உதவும் பண்பு, சமூக நீதி, சமத்துவம், மனிதநேயம் ஆகியவையும் நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயிக்கின்றன.

இந்த உயர்ந்த பண்புகளை இளைஞர்களிடம் வளர்க்கும் பணியில் NSS முக்கியபங்காற்றுகிறது.

நாட்டு நலப்பணி திட்ட நாள் என்பது ஒரு குறிப்பிட்ட நாளைநினைவுகூர்வதற்காக மட்டுமே கொண்டாடப்படும் நாள் அல்ல. “நான் சமூகத்தின் ஒருபகுதி, சமூகத்தின் நலன் எனது நலன்” என்ற உணர்வை ஒவ்வொரு மாணவரின்மனதிலும் விதைக்கும் நாள். NSS மாணவர்களுக்கு சேவையை மட்டும் கற்றுத்தருவதில்லை, மனிதநேயத்தையும், பொறுப்புணர்வையும், தலைமைத்துவத்தையும், நாட்டுப்பற்றையும் கற்றுத் தருகிறது.

ஒரு நல்ல மாணவன் நல்ல மதிப்பெண் பெறுபவன் மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் துயரத்தை உணர்பவன். முடிந்த உதவியைச்செய்பவன். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பவன் பிறரை மதிப்பவன். நாட்டின் வளர்ச்சிக்குதன் பங்களிப்பை வழங்குபவன்.

நான் அல்ல நீ என்ற NSS கொள்கை ஒவ்வொரு இளைஞனின்வாழ்வியல் கொள்கையாக மாறினால், சமூகத்தில் அன்பும் ஒற்றுமையும் வளர்ந்து, வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும். சமூக சேவை என்பது பிறருக்காக நாம்செய்யும் உதவி மட்டுமல்ல, நம்மை ஒரு சிறந்த மனிதராக வாய்ப்பும்கூட ஆகும். எனவேநாட்டு நலப்பணி திட்ட நாளில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி ஒன்றே. என்வளர்ச்சியோடு சமூகமும் வளர வேண்டும், என் வாழ்க்கையோடு நாட்டின் நலனும் உயரவேண்டும்.