தொடர்கள்
அனுபவம்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வேதனை

20231109005921665.jpg

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் வெறும் அலட்சியம் தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவற்றால் ஒவ்வொரு முறையும் தங்கள் பகுதி மக்கள் பெரும் துயரத்தை சந்திப்பதாக வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து ஆறாம் தேதி அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 10ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குறைந்தது ஒரு வாரம் முழங்கால் அளவு தண்ணீர் மற்றும் 100 மணி நேரம் மின்வெட்டு நிலவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தாண்டும் மிக்ஜாம் புயல் ஏற்கனவே வரலாறு காணாத மழையை பொழிந்துள்ளது. வேடிக்கை என்னவென்றால் நான் இருக்கும் கொளப்பாக்கம் தொகுதி ஒரு ஏரியோ அல்லது தாழ்வான பகுதியோ அல்ல. சென்னை மற்றும் எந்தப் பகுதியை விட இங்கு ஏராளமான திறந்தவெளி நிலங்களும் குளங்களும் உள்ளன.

20231109005830196.jpeg

வெறும் அலட்சியம் தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவை மழைநீர் மற்றும் கழிவுநீர் ஒரே கால்வாயில் செல்வதற்கு வழிவகுத்தது. அதனால் ஒவ்வொரு முறையும் வெள்ளம் ஏற்படும் போது ஆறு போல் பெருக்கெடுத்து இந்தப் பகுதி மக்களை தாக்குகிறது .இந்த நேரத்தில் யாராவது நோயால் பாதிக்கப்படுவது அழகு மருத்துவ எமர்ஜென்சியில் இருப்பவர்கள் மரணிப்பதும் மன வேதனையை ஏற்படுத்துகிறது.

மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன. அவைகளை பயன்படுத்தி மீட்பு மற்றும் பிற முக்கியமான தேவைகளுக்கு என்னால் முடிந்தது அனைத்தையும் செய்து வருகிறேன்.

நான் எங்கு சென்றாலும் மிகவும் நெகிழ்ச்சியும் நேர்மறையும் இருக்கிறது. தீர்வு காண முயற்சி இருக்குமென்று நம்புகிறேன். எனக்கு நியாயமற்ற எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால் இப்போது இருப்பதை விட வேகமாக நிவாரணப் பணிகள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்று அந்தப் பதிவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எதார்த்தமான கருத்தை சொல்லி இருக்கிறார்.