தொடர்கள்
விளையாட்டு
சன் ரைஸர்ஸ் சர்ச்சை - லண்டனிலிருந்து கோமதி

20260214073620657.jpg

தி ஹன்ட்ரட் லீக் தொடரில் காவ்யா மாறன் முதலீடு செய்திருக்கும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக பாகிஸ்தான் அணியின் அப்ரார் அஹ்மத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் நமது வீரர்கள் கைகுலுக்காமல் விலகியது, IPL ஆட்டங்களில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெறாதது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இங்கிலாந்தில் நடந்து வரும் தி ஹன்ட்ரட் லீக் தொடரில் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. அம்பானி, எல்எஸ்ஜி அணியின் உரிமையாளர் சஞ்சீவ் , சன்ரைசஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உட்பட அனைவரும் பல்வேறு அணியின் பங்குகளை வாங்கினர். நார்த்தென் சூப்பர்சார்ஜர்ஸ் என்னும் அணியில் முதலீடு செய்த சன்டிவி குழுமத்தினர் அந்த அணியின் பெயரை சன்ரைசர்ஸ் லீட்ஸ் என்று பெயரிட்டனர். தனது அணிக்காக, பாகிஸ்தான் அணியின் லெக்-ஸ்பின்னர் அப்ரார் அகமதுவை காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி £190,000 (இந்திய மதிப்பில் சுமார் 2.1 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய சன் குழுமத்தின் மற்ற அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றது இல்லை.அப்ரார் அஹமத் முன்பே பல சர்ச்சைகளில் ஈடுபட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் ஷிகர் தவனோடு தான் குத்து சண்டை போட விரும்புவதாக அவர் கூறியது, பாகல்கம் தாக்குதலை குறித்து நமது ராணுவ வீரர்களை கேலி செய்ததையும் நாம் எளிதாக மறந்துவிட முடியாது. இவரை தனது அணியில் இணைத்துள்ள காவ்யா மாறனின் செய்கை சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும். இந்திய ரசிகர்களின் மன நிலையை கருத்தில் கொள்ளாமல் காவ்யா மாறன் செய்தது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்பது கிரிக்கெட் ரசிகர்களின் வாதம்.