தொடர்கள்
அரசியல்
அடுத்த ஆட்சி -அயோத்தி ராமர் பங்கு? -விகடகவியார்

ஜன சங் -இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் பூர்வாசிரம பெயர். ஜனசங் கட்சி மூன்று விஷயங்களை தெளிவாகஅதே சமயம் உறுதியாக இருந்தது.

1.அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது.

2காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 ரத்து

3.பொது சிவில் சட்டம் கிட்டத்தட்ட இந்த மூன்று விஷயங்களையும் பாரதிய ஜனதா அவர்கள் விருப்பப்படி அவர்களுக்கு ஏற்றார் போல் நிறைவேறிவிட்டது என்று தான் சொல்லலாம்.
ராமர் கோயில் 370 பிரிவு சட்டம் இரண்டுமே சரிதான் என்று உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு விட்டது. பொது சிவில் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் சட்டசபையில் மசோதா இயற்றும் அளவுக்கு போய்விட்டது. இப்போ எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டம் காஷ்மீர் 370 பிரிவு சிறப்பு சட்டம் பற்றி பெரிய அளவில் பேசுவதில்லை. அவர்கள் பேசுவது பயப்படுவது எல்லாமே ராமர் கோயில் பற்றி தான்.
பாரதிய ஜனதாவை பொறுத்தவரை அதுவும் குறிப்பாக பிரதமர் மோடியை பொறுத்தவரை வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அவர் கையில் வைத்திருக்கும் வலுவான அஸ்திரம் அயோத்தி ராமர் கோயில்.

ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதா வேண்டாமா என்பதை விவாதிக்கும் அளவுக்கு ராமர் கோயில் எதிர்க்கட்சிகளை கொண்டு சென்று விட்டது என்பதுதான் உண்மை. இதான் பாரதி ஜனதாவின் அரசியல் ட்ரிக் என்று கூட சொல்லலாம்.

அயோத்தி கோயில் திறப்பு விழாவிற்கு பளிச்சென நாங்கள் மதச்சார்பற்ற கொள்கை பின்பற்றுபவர்கள் எனவே நாங்கள் வரமாட்டோம் என்று அவர்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை முதலில் கம்யூனிஸ்ட் சொன்னது அடுத்த சில வாரங்கள் கழித்து சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்கள் அதைத்தொடர்ந்து அகிலேஷ் யாதவ் சொல்லி இருக்கிறார் இப்போது .நிதீஷ் குமார் கட்சி ராமரை ராமர் கோயிலை இழித்துப் பேசக்கூடாது என்கிறது .

காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் 1984 இல் பாபர் மசூதியில் இந்துக்கள் உள்ளே சென்று அங்கு இருக்கும் இந்துக் கோயிலை வழிபட திறந்து விட்டதே காங்கிரஸ்தான் என்று அவரும் சொந்தம் கொண்டாடுகிறார்.

திமுகஇது பற்றி இன்னும் தெளிவான ஒரு கருத்து சொல்லவில்லை. அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழக ஆன்மீக பக்தர்கள் அயோத்தி சொல்ல கோரிக்கை வைத்தால் நாங்கள் அதை பரிசீலிப்போம் என்றார். இப்போது ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மீக பக்தர்களை இலவசமாக அழைத்துச் செல்ல ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் கோயில்களில் ஒலித்துக் கொண்டிருந்தது இப்பொழுது கிரிக்கெட் ஸ்டேடியம் வரை வந்துவிட்டது. இதுதான் பாரதிய ஜனதாவின் வெற்றி.


ராமர் கோயில் கட்டுவது என்பது விஷ்வ இந்து பரிஷத் ஏற்பாடு .இதேபோல் ராமர் கோயில் கட்டுவது பாரதிய ஜனதாவுக்கு நேரடி தொடர்பு இல்லை.அவர்கள் திட்டமெல்லாம் அமைதியாக தான் நடந்தது .ராமர் கோயில் கட்டுவதை விஷ்வ ஹிந்து பரிஷத்திட்டமிட்டது அதனை ஆர்.எஸ்.எஸ்.தீவிர படுத்தியது.ஆனால் இவர் எல்லோரும் ஒரே மாதிரி சொன்னது இதுதான் ராமர் கோயில் நிச்சயம் கட்டுவோம் ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு என்றார்கள்.

பெரும்பாலான பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டுவது இருக்கும்.

1996 தேர்தல் அறிக்கையில் மட்டும் பாரதிய ஜனதா ராமர் கோவில் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை இது பற்றிய கேள்விக்கும் அவர்கள் எதுவும் பதில் சொல்லவில்லை அதுதான் அவர்கள் அரசியல்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர் ராமர் கோயில் பற்றி பெரிதாக எதுவும் பேச மாட்டார். நிருபர்கள் ராமர் கோயில் பற்றிய கேள்வியை கேட்டால் அதைத் தவிர்த்து விடுவார் வாஜ்பாய். அதேபோல் ராமஜென்ம பூமி சம்பந்தப்பட்ட வழக்கை அவர் பிரதமராக இருந்தபோது துரித படுத்தவெல்லாம் முயற்சி செய்யவில்லை.

வாஜ்பாய் ஒரு மிதவாதி. வாஜ்பாய் பற்றிஆர் எஸ் எஸ் குறிப்பிடும் போது அவர் எங்களின் உண்மையான முகம் அல்ல அவர் எங்கள் முகமூடி என்று தான் குறிப்பிட்டது. ஆர் எஸ் எஸ் இன் முக்கிய தலைவர் பாரதிய ஜனதாவின் பொதுச் செயலாளராக இருந்த கோவிந்தாச்சாரியாஒரு முறை வாஜ்பாய் ஆர் எஸ் எஸ் இல் இருந்தார் அவ்வளவுதான் என்று சொன்னார்.
உத்திரபிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்லி தான் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்தது .

ராமர் கோயில் அயோத்தியை தாண்டி உத்திரபிரதேசத்தையும் தாண்டி அது தேசிய அளவில் பேசும் பொருளாக விவாதத்துக்குரிய ஒரு பிரச்சனையாக ஆக்கியது பாரதிய ஜனதா தான்.

அதனால்தான் 1991 இல் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டுவோம் என்றார்.ராஜீவ் காந்தி தந்த கடைசி பேட்டி இதுதான்.
1984 இல் விஷ்வ ஹிந்து பரிஷத் பாரதிய ஜனதா இணைந்து கர சேவை இயக்கத்தை தொடங்கியது. இந்த இயக்கத்தில் பால் தாக்கரேவின் சிவசேனாவும் கலந்து கொண்டது. கர சேவை என்பது அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டுவது தான் கர சேவை என்று விளக்கம் சொல்லப்பட்டது .
ராமர் கோயில் கட்டுவதற்காக ரத யாத்திரை தொடங்கினார் பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே அத்வானி. இந்த ரத யாத்திரை தமிழ்நாட்டுக்கு வந்தது. பீகாரில் எல்கே அத்வானி ரத யாத்திரை நுழைந்தபோது அன்றைய பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் எல் கே அத்வானியை கைது செய்தார்.

இதனை தொடர்ந்து வி பி சிங்குக்கு தந்த ஆதரவை பாரதி ஜனதா விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து மத்தியில் விபி சிங் ஆட்சி கவிழ்ந்தது. இப்படி ராமர் உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்க வழி வகுத்தார் மத்தியில் ஆட்சியை கவிழக்கவும் ராமர் உதவி செய்தார்.
ராமர் கோயில் கட்டுவது சம்பந்தமான உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் இதுவே இறுதி தீர்ப்பு மேல் முறையீடு கிடையாது எந்த அந்த தீர்ப்பிலேயே குறிப்பிட்டது.

ராமர் கோயில் கட்ட பூமி பூஜை போட்டபோது விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பொது மேடையில் பேசும்போது இன்னும் நான்கு ஆண்டுகளில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் அப்போது இந்துக்கள் அனைவரையும் ஒரே அணியில் திரள வைக்கும் வேலையில் பாரதிய ஜனதா ஈடுபடும் அப்போது நாம் என்ன செய்வது என்று கேட்டார் அன்று திருமாவளவன் சொன்னது தான் இப்போது நடந்திருக்கிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தில் கடைசி தினம் அன்று நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

பத்தாண்டு ஆட்சி என்பது வாக்காளர்களுக்கு அலுப்பு தட்டும் ஒரு விஷயம் அவர்கள் மாற்றி யோசிக்கக்கூடும் என்ற அச்சம் தான் பிரதமர் மோடியை ராமர் கோயிலை கையில் எடுக்க வைத்தது இதுதான் உண்மை. மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதற்கு பிரதமர் எடுத்திருக்கும் அஸ்திரம் தான் ராமர் கோயில்.
ராமர் கோயில் கட்டுவது ராமஜென்ம பூமி அறக்கட்டளை இதற்கும் பாரதிய ஜனதாவுக்கும் பிரதமருக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியும் வரத் தொடங்கி இருக்கிறது.

தேர்தலில் இந்திய மக்கள் வாக்கு எப்படி அளித்தார்கள் என்பது வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் தெரிந்துவிடும்.