ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சாரிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.
சிவன் சாரின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
ஸ்ரீ ஸ்ரீனிவாச ராவ்
சென்னை அடையாறில் உள்ள ஸ்ரீ அந்தபத்மநாப ஸ்வாமி கோயில் உருவாக காரணமாக இருந்த ஸ்ரீ ஸ்ரீனிவாச ராவ் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கும். 1950களில் தொடங்கிய அவருடைய பரிச்சயம் அவரது 96 வயதில் இன்று வரை தொடர்கிறது. ஸ்ரீ மஹாபெரியவளின் அனுக்கிரஹம் எப்படி சாதாரண மனிதர்களையும் மகத்துவமான மனிதர்களாக மாற்றியுள்ளது.
Leave a comment
Upload