தொடர்கள்
கதை
மறு பிறவி -6-   கி. ரமணி

20240403234050607.jpg

பின்னர் பெட்டியிலிருந்து வீட்டுப் பத்திரம் விழுந்தது.

ஆதி பின் மெதுவாக தான் காணாமல் போன கதையை சித்தார்த்துக்கு சொன்னான். ரதி என்ற வேற்று கிரக பெண்ணின் அன்பு, அவளுடன் மின்னல் வேக அண்ட சராசரப் பயணம், அவள் அந்த ஒரு நாளைக்கு நகை எல்லாம் அணிந்து அழகு பார்த்து சந்தோஷித்துப் பின் நகைகளை இரு மடங்காக்கிக் கொடுத்தது,

கல்லூரில் தன்னை மயக்கத்தில் இறக்கி விட்டது. தன் உருவத் திலிருந்து ஒளி மயமாக மாறிப் பயணித்து பின் மீண்டும் பழைய உருவத்துக்கு மாறியது.

எல்லாம் சொன்னான்.

சித்தார்த்.நம்பினதாகத் தெரியல. ஆனால் டிரங்க் பொட்டியோட நகைகளயும், வீட்டு பத்திரத்தையும் பீரோக்குள் வைத்து பூட்டிவிட்டான்.வந்த வரைக்கும் லாபம் என்று.

பின் ஆதியிடம்" நீங்க சாப்பிட்டுவிட்டு கீழ நல்லா ஓய்வெடுங்க சார். .மாலையில் சந்தித்து எல்லாம் விவரமா பேசி முடிவு பண்ணலாம் . " என்று

சொல்லிவிட்டு நாடலியுடன் மாடிக்கு சென்றான்.

பின்,தன் நண்பனும் வானியற்பியல் பேராசிரிருமான அமெரிக்காவில் இருக்கும் அர்ஜுனுக்கு வாட்ஸ் அப் கால் பண்ணி ஆதி சொன்ன கதையைச் சொன்னான்."இப்படி எல்லாம் நடக்க முடியுமா? "என்று கேட்டான்

முழுசும் கேட்ட அர்ஜுன் கூறினான்.

" டைம் ட்ராவெல் பத்தி நிறைய சினிமால,டிவி ல, கதைல பாத்திருக்கோம். எல்லாம் இன்றைய விஞ்ஞானத்தைப் பொறுத்த வரை வெறும் கற்பனை என்று நிராகரித்துச் சொன்னாலும், இறந்த காலம் நோக்கி பயணிப்பதை விட

எதிர்காலப் பயணம் கொஞ்சம் சாத்தியம்னு சொல்லலாம்.

ரதி,ஆதி பயணித்த விண் கலம் ஒளியின் வேகத்துக்கு பக்கத்திலான அதி வேகத்தில் போக முடிந்தால் அந்த விண் கலத்துக்குள் நேரம் மிக மெதுவாகச் செல்லும். இது ஐன்ஸ்டீனின் விதி. அதாவது கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிமி பக்கம் ஒரு நொடியில் விண்கலம் போக முடிந்தால் விண் கலப் பயணிகளின் நேரம் மிக மெதுவாகப் போகும். விண்

கலப் பயணிகளின் ஒரு நாள் என்பது நமது பூமியில் பல வருஷங்களுக்கு சமம் ஆகலாம். உன் தாத்தா என்று கூறுபவன் அவனுடைய ஒருநாள் விண்வெளிப் பயணத்தில் நம் உலகில் 60 வருஷம் கடந்து விட்டதாக சொல்கிறான்.

ரதியும், ஆதியும், விண்கலமும்,ஒளி வடிவத்தில் மாறியதாக சொன்னது, எடையை இழந்து , விண் கலம் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் சென்றது என்ற அவன் கற்பனைக்கு நம்பகம் சேர்க்க உதவுகிறது.

இது தத்துவார்த்தமாக பார்த்தால் தவறு இல்லை என்றாலும் நடைமுறை வாழ்க்கையில் இது எல்லாம், நடக்காது

உதவாது, அப்பட்டமான பொய்.

ஆதின்னு வந்தவன் ஒரு மூளை உள்ள,கிரிமினலா கூட இருக்கலாம்.

நம்பும்படி சயின்ஸ் பிக் ஷன் பேசி

உங்களை ஏமாத்தப் பார்க்கலாம்.

அல்லது மறை கழன்ற சயன்ஸ் பைத்தியமாகக் கூட இருக்கலாம்."

சித்தார்த் குறுக்கிட்டு,

"தொலைந்த நகை, பத்திரம் எல்லாம்அவன் கொண்டு வந்திருக்கான். தவிர, பார்க்க என் தாத்தா அந்தக்கால போட்டோவில் இருப்பது போல இருக்கான்."

என்றான்.

"எதையும் உடனே நம்ப வேண்டாம். முதல்ல போலீஸ கூப்பிடு இவனை அரெஸ்ட் பண்ணி அப்புறம் அவன் கை ரேகை, டி என் ஏ எல்லாம் பாக்கலாம்.அவனை போலீஸ் பாணியில் விசாரிக்கலாம்.. உடனே போலீஸ்க்கு சொல்லு." என்று முடித்தான் அர்ஜுன்.

சரி என்றான் சித்தார்த். மாலை மணி ஆறரை ஆகிவிட்டது.போலீசை வரச்சொல்லிக் கூப்பிட்டுப் பின் கீழே சென்று ஆதி அங்கு இருப்பதை நிச்சயம் செய்யப் போனான்.'நல்லா மாட்டினான்.இந்த ஆள்...

என்று நினைத்துக்கொண்டு.

ஆனால்,ஆதி வீட்டில் இல்லை.

டி சம்பர் 4... 2023.. மாலை ஏழு மணி

சற்று தூங்கி எழுந்த ஆதிக்கு ரொம்ப சோர்வாக இருந்தது. ஒரே நாளில்

அறுபது வயது அதிகமாகிவிட்டது. மனைவி போய் விட்டாள்.பெண்

குழந்தை வயது முதிர்ந்து கிழவியா

அமெரிககால இருக்கா. யாரோ என்

வாரிசு, பேரன் என்று வீட்டுல இருக்கான்.

எல்லாரும் எனக்கு நூறு வயதுன்னு திவசம் பண்ணறாங்க. ஒருத்தனும் நான் தான் ஆதிசேஷன்னு நம்பல.

ஒரு நாள் ரதியோட பயணம் இப்படி இங்கே 60 வருஷத்த முழுங்கி விட்டதே.. என்று சலிப்புடன் தாமிரபரணிக் கரைக்கு நடந்து சென்றான். ஒருவரும் அங்கே இல்லை. கிட்டத்தட்ட இருட்டி விட்டது

ரொம்ப மாறிப்போய்

ஆனால் இன்னும் அழகாகத்தான் இருந்தது ஆத்தங்கரை. .

"எல்லாம் வெறுத்துப்போச்சு ஒரே நாள்ல.ஆனா அந்த ரதி எவ்வளவு நல்ல பெண்.அவளை விட்டுட்டு ஏன் இங்கு வந்தோம்?"

இப்படி ஆதி எண்ணும் போது எதிரே ஒரு சின்ன மின்னல். ஒரு பலூன்

போன்ற உருண்டை விண்ணிலிருந்து இறங்க அதிலிருந்து ஒளிமயமாக ரதி இறங்கி மிதந்து வந்து "ஆதி! வா நாம் போகலாம்." என்றாள்.

நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் ஆதி அவளை நோக்கி ஓட.. இருவரும் அந்த பலூனில் ஏறிக்கொள்ள ஒளிச் சாரல் தெறிக்கக் கிளம்பியஅந்த விண்கலம்

ஒளி வடிவில் மாறி நொடியில் வானில்

மறைந்தது.

(முற்றும்.!)