குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பகல் ( ஜூன் 12 ) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம் புறப்பட்ட மூன்றாவது நிமிடத்திலேயே நிலைகுலைந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
நன்றி- தினமணி
விமானம் லண்டன் வரை செல்ல இருப்பதால் முழு கொள்ளளவான 1,12,500 லிட்டர் வெயில் பெட்ரோல் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.
விமானம் கீழே விழுந்த அடுத்த சில நொடிகளிலேயே வெடித்து சிதறி அந்த இடம் முழுவதும் அணுகுண்டு வெடித்தது போன்று தீ பிழம்பும் புகையும் எழம்பியது.
விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்கள். ஒருவர் மட்டும் தப்பித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டிருக்கிறார்
கேரளாவை சேர்ந்த ரஞ்சிதா கடந்த ஆண்டு இங்கிலாந்து மருத்துவமனையில் நர்ஸ் வேலைவாய்ப்பு கிடைத்தது. தனது சொந்த ஊரான புல்லாடு பகுதியில் ஒரு புதிய வீடு கட்டி வருவதை அவரது குடும்பத்தினர் உடன் வந்து, மூன்று நாள் விடுமுறையில் சொந்த ஊரில் இருந்து சந்தோஷத்துடன் லண்டன் திரும்பும் போது கருகிப் போனார். ரஞ்சிதா சொந்த வீடு கனவு மெய்ப்பட்டது ,உடல் கருகி போனது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் கோனி வியாஸ் தனது கணவர் பிரதீப் ஜோஷி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இங்கிலாந்து வாசியாக குடும்பமே மாறுவதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து மகிழ்ச்சியாக அகமதாபாத்தில் விமானம் ஏறினார்கள் விமானம் புறப்பட்ட மூன்றாவது நிமிடத்தில் லண்டன் கனவு கருகிப்போனது.
விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இந்த இயக்கப்படவில்லை.
கோளாறுகள் சரி செய்யப்பட்டு நேற்று பயணித்த உடனேயே இந்த விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தை ஓட்டிய பைலட் சபர்வால் 8,200 மணி நேரத்துக்கு மேல் ஓட்டிய அனுபவசாலி. உதவி பைலட்டும் 1100 மணி நேரம் விமானம் ஓட்டி அனுபவசாலி.
இதுவரை இவர்கள் விமான ஓட்டிய போது ஒரு விபத்து கூட ஏற்பட்டது இல்லை.
விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திலேயே விமானத்தில் கோளாறு இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
Mayday என்று மூன்று முறை சொல்லித் தரைதளத்துக்கு எச்சரிக்கை விமானத்துக்கு ஆபத்து என சமிக்ஞை செய்தார்கள்.
ஏர் இந்தியா விமானத்தில் என்ன பிரச்சனை என்று கீழே இருந்து திரும்பத் திரும்ப கேட்டபோது எந்த பதிலும் சொல்ல முடியாமல் தீ பிழம்பிகாக விமானம் நொறுங்கிவிட்டது.
அகமதாபாத் விமான விபத்திற்கு எஞ்சின் கோளாறா அல்லது பறவை மோதியதா என்றும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
போயில் 787 ட்ரீம் லைனர் விமானங்கள் தயாரிப்பில் மிக நுட்பமான தொழில்நுட்ப கோளாறு உள்ளது சுட்டிக்காட்டி இதை சரி செய்யாவிட்டால் விபத்துகள் நேரிடுவதை தடுக்க முடியாது,இது ஆபத்தானது என்று போயிங் நிறுவனத்தில் பணியாற்றிய என்ஜினியர் சாம் சளேபர் என்பவர் கடந்த ஆண்டு கூறியிருந்தார். இதனி போயிங் தயாரிப்பு நிறுவனம் மறுத்தது.
விமானத்தில் தனது மகளை பார்ப்பதற்காக மூத்த பாஜக ஆர் எஸ் எஸ் தலைவரும் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்தார். இவர். இவரது அதிர்ஷ்ட எண் 1206. என்பதால் தனது எல்லா வாகனங்களிலும் இந்த பதிவு எண்ணையே வைத்திருந்தார். அவர் இறந்தது 12.06 .
குடும்பத்துடன் சந்தோஷமாக பாகல்ஹாம் போனவர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட போனவர்கள் பெங்களூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள் .
விமானம் விழந்து நொறுங்கியிருக்கிறது.....
ஒரு பாவமும் அறியாத மருத்துவ கல்லூரி மாணவர்கள் விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இந்த விமானம் காவு வாங்கிருக்கிறது.
மரணம் கணிக்க முடியாது தான், மனித தவறுகளை திருத்தி கொண்டாலும், காலன் என்றுமே பழி ஏற்றுக் கொள்வதில்லை.
Leave a comment
Upload