தொடர்கள்
கவிதை
‎"ஆசை என்பது அவஸ்தை". - இரா. மணிகண்டன்

20250626090632636.jpeg

‎பக்கத்து நிலத்தின்

‎காணிக்கல் லேசாக

‎அசைக்கப்படுகிறது!

‎வரப்புகளும்

சிறிது சிறிதாக வெட்டப்பட்டு

‎வரம்பு மீறப்படுகிறது!

‎விஷக் காளான்களுக்கும்

‎முள் வேலி

‎அமைக்கப்படுகிறது!

‎சொட்டு நீருக்காக

‎இரத்த ஆறு

‎ஓட வேண்டியிருக்கிறது!

‎நினைவிருக்கட்டும்....

‎சிறிய ஆசை

‎என்பது

‎பெரிய அவஸ்தை!

‎பெரிய ஆசை

‎என்பது

‎மிகப்பெரிய அவஸ்தை!

‎***