
அயோத்தியா நகரில், ராம ஜென்ம பூமியில் ஜூன் 5, 2025 அன்று கோயிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நவம்பர் 25, 2025 அன்று பிரதமர் கோயிலின் பிரதான கோபுர கலசத்தையொட்டி கொடியேற்றி வைத்ததன் மூலம் கோயிலின் முழு கட்டுமானப் பணிகளும் முடிவடைந்தது.
பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோயில் கொடியேற்றி (துவஜாரோஹண) வைத்த நிலையில் பேசுகையில், “அயோத்தியில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. 500 ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்த ஒரு நாகரிக உறுதியை நிறைவேற்றுவதைக் குறிக்கிறது” என்றார்.
முன்னர் குருகுலத்தில் வேதம் பயிலும் மாணவர்கள் வேத கோஷம் உரைத்தனர்.
பிரதமர் மோடி தனது வருகையின் போது, சப்தமந்திர், சேஷாவ்தர் மந்திர் மற்றும் மாதா அன்னபூர்ணா மந்திர் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தார், ராம் தர்பார் கர்ப்ப கிரஹம் மற்றும் ராம் லல்லா கர்ப்ப கிரஹத்தில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.
அயோத்தி மலர்கள், ரங்கோலிகள், விளக்குகள் மற்றும் லேசர் ஷோவால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்ற பிரமுகர்கள் உட்பட கிட்டத்தட்ட 7,000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்க பின்னணியைச் சேர்ந்தவர்கள், பின்தங்கிய வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
சுமார் 900 விருந்தினர்களில் கோயில் பணியாளர்கள் மற்றும் கட்டுமானத்திற்கு பங்களித்த நன்கொடையாளர்கள் அடங்குவர்.
10 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்ட செங்கோண காவிக்கொடி, பகவான் ராமரின் புத்திசாலித்தனம், வீரம் மற்றும் தெய்வீகத்தன்மையைக் குறிக்கும் சூரியன், 'ஓம்' மற்றும் கோவிதார் மரத்தைத் தாங்கி நிற்கிறது.
ராமர் மற்றும் சீதையின் தெய்வீக திருமணத்தை நினைவுகூரும் புனித நாளான மார்கஷீர்ஷ சுக்ல பஞ்சமியின் விவாஹ பஞ்சமியில் கொடியேற்றம் நடைபெற்றது.
12 மாநிலங்களைச் சேர்ந்த இசைக்குழுக்கள் அயோத்திய்வில் பங்கு கொண்டனர்.
22 அடி நீளமும் 11 அடி அகலமும் கொண்ட இந்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கொடி, அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பாராசூட் நிபுணரால் 161 அடி உயர கோயில் உச்சியில் உயரமான சூழ்நிலைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு முதல் மூன்று கிலோகிராம் வரை எடை கொண்ட இந்தக் கொடி, 42 அடி கொடிக்கம்பத்தில் நீடித்து உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கு சோன்பத்ராவைச் சேர்ந்த பழங்குடியினர் மற்றும் வனவாசி சமூகங்களின் பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட,டிருந்தன.
சமாஜ்வாதி கட்சியின் பைசாபாத் எம்.பி. அவதேஷ் பிரசாத், தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்" என்பதால் கொடியேற்ற விழாவிற்கு அழைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
அயோத்தியில் நடைபெற்ற ராமர் மந்திர் கட்டுமான விழாவிற்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் வாழ்த்துத் தெரிவித்து, அதை ஒரு முக்கியமான நாகரிக சின்னம் என்றும் குறிப்பிட்டார். கட்டுமானத்தின் போது கோயிலுக்குச் சென்றபோது எடுத்த படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், திட்டமிடுபவர்கள், தொழிலாளர்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a comment
Upload