
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
நடமாடும் தெய்வம் - பாகம் - 11
நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
இந்த வாரம் பதினொன்றாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .
ஸ்ரீ மகா பெரியவாளின் அனுகிரக உரையுடன் தொடங்குகிறது இந்த வாரம். சிவன் சிறந்தவரா , அல்லது ஸ்ரீ விஷ்ணு சிறந்தவரா என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார். பேயாழ்வார் பாசுரத்தையும், ஸ்ரீ ஆதிசங்கரரின் விளக்கத்தையும் அருளுரையாக வழங்குகிறார்.

Leave a comment
Upload