தொடர்கள்
பொது
மணிகள் நிறைந்த கோயில்- பால்கி

20260628225208317.jpg


மும்பையின் மேற்கு புறநகர் பகுதியில் (Western Suburb) உள்ள கார் ரோடு (மேற்கு) என்னுமிடத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீ கண்டேஷ்வர் ஹனுமான் கோயில்.

2026 ஜூலை 7, 8, 9 தேதிகளில் இந்த கோயில் பிராணப்ரதிஷ்டா, கலசாரோஹணம், பொது ஜனங்களுக்கு கோயில் அர்ப்பணம் என்று அதில் அடங்கும்.

மக்களுக்கு கோயில் அர்ப்பணிக்கப்பட்டபோது

முதல் இரண்டு நாட்களிலும் விதி முறைப்படி பூர்வாங்க கும்பாபிஷேகத்திற்குண்டான பூஜைகள், வேள்விகள், போன்றவைகள் நடந்தேறின.

20260628225826930.jpeg

சுயம்பு ஹனுமார் விக்ரகத்திற்கு ஜலாதி(நீர்) வாசம், மற்றும் அரிசியால் நிறப்பி தானிய வாசம் செய்வித்தனர்.

20260628225905291.jpeg

விமான கலசத்திற்கும் அதே சடங்கு செய்வித்தனர் என்று உமேஷ் குப்தே சொல்லிக்கொண்டிருந்தார்.

20260628225941481.jpeg

நாடெங்குமிருந்து சமய பீடாதிபதிகள், மற்றும், மாநிலத்தின் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விழாவின் இறுதி நாளன்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் இன்னாள் எம் பியும் ஆன ஹர்பஜன் சிங்

20260628231358411.jpg

மூன்று நாளும் கோலாகலம் தான்.

நம்ம வீட்டு கல்யாணம் போன்று பெருக்கெடுத்துக் கூடும் பக்தர்கள் தங்களால் இயன்றவரை முடிந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தனர்.

9ஆம் தேதி அன்று வேதியர்கள் புடை சூழ வேள்விகள் நடந்துகொண்டிருந்தன.

நவீன கட்டிடக்கலை, பாரம்பரிய சமய அழகு மற்றும் கவர்ச்சிகரமான கைவினைத்திறன் ஆகியவற்றின் அழகான கலவையை அடைவதன் மூலம், இக்கோயிலுக்கு மிகவும் பிரம்மாண்டமான மற்றும் அழகான தோற்றம் பெற்றுள்ளது. இந்தப் புதிய தோற்றத்தின் காரணமாக, கோயிலின் அழகு மேலும் கூடியது.

20260628230121274.jpg

இக்கோயிலில் உள்ள ஸ்ரீ ஹனுமானின் சிலை சுயம்புவானது.

1959 ஆம் ஆண்டில், ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் இரவு, அந்த நண்பர்களில் ஒருவரான

20260628230253954.jpeg

ரமேஷ் மோரேவிற்கு (மேலேயுள்ள படத்தில் இடமிருந்து இரண்டாமவர்) தனது கனவில் ஒரு தெய்வீக உணர்வைப் பெற்றார். மது பூங்காவில் ஆல (வட்) மற்றும் அரச மரங்கள் ஒன்றாக இருந்த அடிவாரத்தில்

20260628230436634.jpg

ஸ்ரீ அனுமனின் சிலை தரையில் புதைக்கப்பட்டிருப்பதை அவர் கண்டார்.

அந்தக் கனவில், ஸ்ரீ அனுமனே அவருக்குத் தோன்றி,

"என்னை இங்கிருந்து மேலே இழுத்து நிலைநிறுத்து. உன்னால் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மறுநாளே, மறைந்த ரமேஷ் மோரே இந்த அற்புதமான அனுபவத்தைத் தனது சக நண்பர்கள் அனைவருக்கும் கூறினார்.

ஆரம்பத்தில், அனைவரும் நம்பவில்லைதான்;

ஆனால், உண்மையை அறிய அனைவரும் அந்த இடத்திற்குச் சென்றனர். அவர் ஆல-அரச (வட்-பிம்பல்) மரங்களின் வேரைத் தோண்டியபோது,

​​*கனவில் கண்ட ஸ்ரீ அனுமனின் சிலை உண்மையில் கிடைத்தது.*

இந்த அற்புதத்தைக் கண்ட அனைவரும், இது ஸ்ரீ அனுமனின் தெய்வீக வெளிப்பாடு என்று ஒப்புக்கொண்டனர்.

இதற்குப் பிறகு, அனைவரும் ஒன்றுசேர்ந்து, அந்த ஸ்ரீ அனுமனின் சிலையை அந்தப் புனித இடத்தில் உள்ள ஆல-அரச (வட்-பிம்பல்) மரங்களின் அடியில் பிரதிஷ்டை செய்து, அங்கு வழக்கமான வழிபாட்டைத் தொடங்கினர். இந்தக் கோயில் "ஸ்ரீஹனுமான் மந்திர், கார் ரோடு” என்று தான் இருந்தது

அனுமனின் அருளைப் பெற்ற பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காக பித்தளை மணிகளை வழங்கும் பாரம்பரியத்தைத் தொடங்கினர். காலப்போக்கில், இந்த மணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்ததால், கோயில் முழுவதும் லட்சக்கணக்கான பித்தளை மணிகளால் அலங்கரிக்கப்படத் தொடங்கியது. பிற்காலத்தில் ஸ்ரீகண்டேஷ்வர் ஹனுமான் மந்திர் என்ற பெயரைப் பெற்றது. “கண்டா” என்றால் மணி என்று பொருள்.

கோயிலைப் பற்றி அவர் கூறும் செய்தி உள்ள வீடியோ கீழே

20260628230745199.jpeg

கோயிலின் இந்த புனருத்தாரணத்தின் போது கூரை தெரியாது அடுக்கி கட்டியுள்ளதைக் கண்டேன்.

20260628230704983.jpeg

கோயிலின் முன் மற்றும் பக்க சுவர்கள் இந்த மணிகளாலேயே அமைக்கப்பட்டுள்ளன.

20260628230825614.jpeg

கூரையைத் தாங்கும் இரும்புத் தூண்களை மணிகளால் சுற்றி கட்டி வைத்துள்ளனர்.

20260628230902856.jpeg

20260628230941716.jpeg

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பக்தர்களின் அலை மோதும்.