தொடர்கள்
கவிதை
ஆனால்... இனி மேல்...?!  - சி. கோவேந்த ராஜா.

20210518145452553.jpeg

இது நாள் வரை...

விடியற்காலையில் எழுந்ததில்லை...!
நடைப்பயிற்சி மேற்கொண்டதில்லை...!

வீணாக ஊரெல்லாம் சுற்றியதில்லை...!
வெளியில்.. வெயிலில்... அலைந்ததில்லை...!
முழு மழையில் முழுக்க நனைந்ததில்லை...!

இரவிலும் எங்கும் தொலைந்ததில்லை...!
எங்கேயும் தவறியும் விழுந்ததில்லை...!
கனவுகள் எதையும் நினைந்ததில்லை...!
நிகழ்வுகள் எதையும் மறந்ததில்லை...!

பொய்யாக எதையும் பகர்ந்ததில்லை...!
மெய்யாக எதையும் மறைத்ததில்லை...!
தேவையின்றி எதையும் உண்டதில்லை...!
மருந்துகள் எதையும் உட்கொண்டதில்லை..!
வீண்விருந்துகள் எதையும் படைத்ததில்லை..!

கண்ணே... கலைமானே...
பெண்ணே... பொன்மானே...
இது நாள் வரை... உனைக் கண்டதில்லை...!

ஆனால்.... இனி மேல்...??!!