தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 22 - காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

கடவுள் ஏன் கல்லானான்?
"அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான் தான் என்றான்....!!!!"

என்றான் அனுபவக் கவியரசன் கண்ணதாசன். இந்த அனுபவக் கவிஞனின்
தத்துவப் பாடலில் இதுவும் ஒன்று!

நல்லவன் கெட்டவன் என்று இரண்டு வகையிலும் மனிதர்கள் உண்டு. இதிலே கெட்டவன் செயல்களால் நல்லவன் பாதிக்கப்படுகிறபோது.. படைத்த கடவுளை அழைத்து கேள்வி கேட்பது கண்ணதாசனுக்கு கைவந்த கலையே!

நேரில் வாழும் தெய்வங்களுக்கெல்லாம் நிம்மதி கிடையாது.. அந்த நிம்மதி தேடி ஓடிய தெய்வம் கல்லாய் மாறியது! என்கிற வரிகள் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் என் சிந்தனையில் உதித்தது.. ஏதோ ஒரு அழுத்தம் மனதை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது என்றுமட்டும்தான் சொல்வேன்.

பகுத்தறிவுப் பார்வையில் கடவுளை மனிதன் தேடிக் கொண்டிருக்கும் அதே வேளையில்.. மனசாட்சியும் கூட கடவுள்தான் என்று கண்ணதாசன் இப்பாடலில் அனுபவத்திலிருந்து மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கிறார்!

தவறு செய்யாமலே தண்டனை பெறுவது எத்தனைச் சுமையானது? அதுவும் தவறு செய்தவன் யார் என்று தனக்குத் தெரிந்திருந்தும் சட்டரீதியான சாட்சிகள் சாதகமாக இல்லையாதலால், ஆண்டுக் கணக்கில் தண்டனையை அனுபவிக்கும்போது மனம் என்ன பாடுபடும்? யாரிடம் நீதி கேட்கும்? படைத்தவனிடம்தானே? அந்த உணர்வுகளின் ஓங்காரம் இந்தப் பாடல்!

மக்கள் திலகம் திரையில் தோன்றி எளிமையாய் .. இனிமையாய்.. கே.வி.மகாதேவன் வழங்கிய இசையில்.. கண்ணதாசன் வரிகளில்.. எதிரொலிக்கும் இக் கேள்விகள் நியாயத் தராசு பேசிடும் மொழியோ?

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே (3)

கொடுமையை
கண்டவன் கண்ணை
இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன்
சொல்லை இழந்தான் (2)

இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை
இழந்தான் (2)

இங்கு
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை
இழந்தான் எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை இழந்தான்

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்

நெஞ்சுக்கு
தேவை மனசாட்சி
அது நீதி தேவனில்
அரசாட்சி (2)

அத்தனை
உண்மைக்கும் அவன்
சாட்சி (2)
மக்கள் அரங்கத்தில்
வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது
அவன் சாட்சி

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

சதி செயல்
செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன்
குற்றவாளி (2)

உண்மையை
சொல்பவன் சதிகாரன் (2)
இது உலகத்தில்
ஆண்டவன் அதிகாரம் (2)

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

கடவுள் ஏன்
கல்லானான் மனம்
கல்லாய் போன
மனிதர்களாலே

பயணம் தொடரும்...