தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தவரை பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
திமுகவும் தினந்தோறும் அண்ணாமலையை சாடி ஏதாவது கருத்து சொல்லும்.
அதிமுகவுடன் கூட்டணி என்று டெல்லி பாஜக முடிவு செய்ததும் செய்த முதல் நடவடிக்கை அண்ணாமலையை கழற்றி விட்டுவிட்டு நயினார் நாகேந்திரனை தலைவராக நியமித்தது தான்.
தமிழக பாஜக தமிழக அரசியலில் பேசும் பொருள் என்று இல்லாமல் ஆகிவிட்டது.
அண்ணாமலைக்கு கூட ராஜ்யசபா உறுப்பினர் மத்திய அமைச்சர் என்றெல்லாம் முதலில் பேசப்பட்டது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை ஆளுநரானார்.
முருகன் மத்திய அமைச்சரானார்.
அண்ணாமலை விஷயத்தில் அதெல்லாம் நடக்கவில்லை.
அண்ணாமலையும் ஒரு கட்டத்தில் வெறுத்து போய் நான் விவசாயம் பார்க்கிறேன், ஆடு மாடுகளை வளர்த்து வருகிறேன், நிறைய படிக்கிறேன் இந்த வாழ்க்கையே நன்றாக இருக்கிறது என்று பதிவு செய்திருந்தார். அவ்வப்போது ஏதாவது கருத்து அண்ணாமலை சொல்கிறார் , அதில் பழைய அண்ணாமலை வேகம் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.
நயினார் நாகேந்திரன் நிருபர்கள் எது கேட்டாலும் டெல்லி தான் முடிவு செய்யும் என்று சொல்கிறார்.
அண்ணாமலை அப்படி இல்லை அவரது பதில் பளிச்சென்று இருக்கும்.
கமலாலய வட்டாரத்தில் விசாரித்த போது கூட்டணி அதிமுக பற்றி எல்லாம் எந்த கருத்தும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டு பேச வேண்டும் என்று தலைவருக்கு டெல்லி உத்தரவு அவ்வளவு தான் அவர் பேசுவார் என்கிறார்கள்.
அண்ணாமலை பேட்டி என்றாலே பத்து ஃபிளாஷ் நியூஸ் பறக்கும் நயினார் நாகேந்திரன் பேட்டி என்றாலே கடனே என்று போடுகிறார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் இதுதான் இப்போதைய எதார்த்தம்.
தமிழக பாஜகவை கண்டு கொள்வதே இல்லை.
அதிமுகவுக்கும் பொருந்தும் அவர்களும் தமிழக பாஜக பற்றி பெரிய அளவில் பேசுவதில்லை.
அண்ணாமலை ஆதரவாளர்கள் நயினார்நாகேந்திரன் அழைப்பை ஏற்று பெரிய அளவு அவர் நடத்தும் கூட்டங்களுக்கு போவதில்லை.
சென்ற வாரம் திருவான்மியூரில் தமிழக பாஜக சார்பில் 'ஒரே நாடு ஒரே தேர்தல் 'கருத்தரங்கம் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அழைக்கப்பட்டிருந்தார்.
கூட்ட அரங்கில் 2000 நாற்காலிகள் போடப்பட்டது ஆனால் வந்தவர்கள் வந்தவர்கள் 500க்கும் குறைவு. காலி இருக்கைகளை வீடியோ எடுத்து மீம்ஸ் போட்டு விடுவார்களோ என்று பயந்து போய் பாஜக நிர்வாகிகள் அவசர அவசரமாக 1500 நாற்காலிகளை அரங்கில் இருந்து அகற்றினார்கள்
கூட்டம் அதிகம் சேராததுக்கு காரணம் இந்த கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தார். பதாகைகளில் அண்ணாமலை படம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தது என்பதுதான்.
அண்ணாமலையின் வார்ரூம் அரசியல் மிகவும் பிரபலம் .
சமீபத்தில் கமலாலயத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் நயினார் இனி வார்ரூம் அரசியலும் வேண்டாம் என்று அண்ணாமலைக்கு மறைமுகமாக எச்சரிக்கை செய்தார்.
Leave a comment
Upload