இந்த வாரம் ஆடப்பட்ட லீக் மேட்சுகள் எல்லாம் அவரவர் ரேங்க்குகளை மாற்றி அமைக்க உதவின.
வெளியேறியவர்களின் ரேங்க்குகள் இந்த விதமாக நிலை நிறுத்தப்பட்டன.
5 டெல்லி
6. ஹைதராபாத்
7. லக்னௌ
8. கொல்கத்தா
9. ராஜஸ்தான்
10 சென்னை
அந்த விதத்தில் முதல் நான்கு அணிகளிலும் மாற்றம் ஏற்பட்டு கீழ்கண்ட வரிசை நிலை நிறுத்தப்பட்டது.
- பஞ்சாப்
- பெங்களூரு
- குஜராத்
- மும்பை
முதல் இருவர் ஆடுவது முதல் அறை இறுதியாட்டம். அந்த அட்டம் 29 ஆம் தேதி சண்டிகரில் ஆடப்பட்டது. அதில் பஞ்சாப் 101 ரன்களுக்கு அவுட்டாக பெங்களூரு அந்த இலக்கை பத்தே ஓவரில் அடித்து ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது.
30 ஆம் தேதி அதே மைதானத்தில் குஜராத்துக்கும் மும்பைக்கும் எலிமினேட்டர் எனும் போட்டி நடைபெறுகிறது. அதில் வெல்பவர் பஞ்சாபுடன் ஜூன் 1 அன்று அஹமதாபாதில் நடைபெறும் இரண்டாம் அறை இறுதியில் விளையாடுவார்கள்.
ஆம், முதல் இரண்டு ரேங்க்குகளில் வந்தமையால் பஞ்சாப் முதல் அறை இறுதியில் தோற்றாலும் இன்னொறு சான்ஸ் மற்றொரு அறை இறுதியில் ஆடும் தகுது பெறுகிறது.
நடுவில் ஒரு வார லீவு வந்ததில் வெளிநாட்டு ப்ளேயர்கள் இன்னும் டீமில் இருப்பது முடியாத நிலைக்கு சென்று விட்டது.
மும்பை அணியிலிருந்து வில் ஜேக்ஸ், ரையான் ரிகெல்டன், கார்பின் போஷ் இந்த தொடரை முடித்துக்கொண்டு தத்தம் நாடுகளுக்கு திரும்பி விட்டனர்.
குஜராத்திலிருந்து ஜோஸ் பட்லர், பெங்களூரிலிருந்து ஜேகப் பெத்தெல், லுங்கி நிங்க்டி, பஞ்சாபிலிருந்து மார்கோ ஜான்ஸென் தொடரை முடித்துக்கொண்டு தத்தம் நாட்டுக்கு சென்றுவிட்டனர். இதனால் வரும் போட்டிகளில் இவர்களது இல்லாமை கடுமையாக பாதிக்கும் நிலமையக் காணலாம்.
பெங்களூருடனான மேட்சிலும் ஸ்லோ பௌலிங்க் போட்டமைக்காக லக்னௌவின் கேப்டனுக்கு ரூ.30 லட்சம் ஃபைன். இத்தனைக்கும் அந்த மேட்ச்சில் அவரின் அபார சதம் இருந்தது. 61 பந்துகளில் 118 நாட் அவுட்.
பஞ்சாப் அணியின் முதலாளிகளில் ப்ரீதி ஜிந்தாவோடு நெஸ் வாடியாவும் ஒருவர். இவர் பாகிஸ்தானின் நிறுவனர் முஹம்மத் அலி ஜின்னாவின் எள்ளுப் பேரனாவார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஜூன் 3 ஆம் தேதி அஹமதாபாதில் நடைபெறவிருக்கும் ஃபைனல் ஆட்டத்திற்கு முன் இந்த தொடரின் நிறைவு விழாவை பெரிய விழாவாக நடத்த முடிவு செய்துள்ளது. இடையில் ஏற்பட்ட ஆபரேஷன் சிந்தூர் காரணமாக முதலில் திட்டமிடப்பட்ட கொல்கத்தாவில் ஆட இருந்த ஃபைனல் தற்போது அஹமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அந்த விழாவை ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக அமைக்கிறார்கள். அதில் முப்படை தளபதிகளும் அவற்றைச் சேர்ந்த வீரர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நிலை (29.05.2025)
சென்னையின் நூர் அஹமத் 24 விக்கெட்டுகள் (சற்று நேரத்திற்கு முன் நிறைவடைந்த பஞ்சாப் Vs பெங்களூரு முதல் அரை இறுதிப் போட்டியில் ஜோஷ் ஹேசல்வுட் தனது விக்கெட்டுகள் கணக்கை 24க்கு உயர்த்திக் கொண்டுள்ளார்) எடுத்து பர்ப்பிள் கேப்பும்
குஜராத்தின் சாய் சுதர்ஷன் 679 ரன்கள்.எடுத்து ஆரஞ்ச் கேப்பும் பெற்றிருக்கிறார்கள்.
Leave a comment
Upload