சமீபத்தில் கொடைக்கானல் ஏரியில் ஏழு டன் அளவிலான மதுபாட்டில்கள் மற்றும் இதர கழிவுகளை அகற்றியதாக செய்தி வெளிவந்தது.
நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருப்பது பராமரிப்பது இவையெல்லாம் அரசின் கடமை என்று புறம் தள்ளிவிட்டு பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் போவதால் நீர்நிலைகள் மாசுபடுகிறது. இதில் நாம் அரசாங்கத்தை மட்டும் குற்றம் சொல்வது சரியல்ல. குப்பைகளை நீர் நிலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பொதுமக்களுக்கு உண்டு. அவர்களும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
இதேபோல் நொய்யல் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் சாயப்பட்டறை கழிவுகள் கலந்து தண்ணீரின் நிறமே மாறி மாசுபடுகிறது. எனவே நீர் நிலைகளில் மாசுபடுவதை தடுப்பதற்கு இதுபோன்று தவறு செய்பவர்களை தண்டிப்பதற்கான சட்டம் கடுமையானதாக இருக்க வேண்டும். வெறும் அபராதம் மட்டும் இந்த பிரச்சனைக்கு தீர்வல்ல. கைது சிறை தண்டனை என்று தண்டனை கடுமையாக இருந்தால் தான் இந்த குற்றத்தை நம்மால் தவிர்க்க முடியும். அப்போதாவது மக்கள் பொறுப்புணர்ந்து செயல்படுகிறார்களா என்று பார்ப்போம். எனக்கு தண்டனையை கடுமையாக்குங்கள் அப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும்.
Leave a comment
Upload