தொடர்கள்
விகடகவியார்
திமுக கூட்டணியில் சலசலப்பு- விகடகவியார்

20250513203747691.jpeg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் ஆபீஸ் பையன் அவருக்கென்று ஸ்பெஷல் ஆக வாங்கி வைத்திருந்த ஆனியன் வடை, கெட்டி சட்னியை ஒரு பிளேட்டில் கொண்டு வந்து வைத்தார்.

அப்பொழுது நாம் "இவர் வரப்போகிறார் என்று உனக்கு எப்படி தெரியும் ? என்று கேட்ட போது அவருடைய வாட்ஸ் அப் குரூப்பில் நான் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு போனார் ஆபீஸ் பையன்.

திமுக கூட்டணியில் ஒரு பக்கம் திமுக தேர்தல் வேலையை ஜருராக பார்த்துக் கொண்டு இருக்கும் போது, இன்னொரு பக்கம் கூட்டணியில் இப்போதே தொகுதி விஷயத்தில் சலசலப்பு ஏற்பட தொடங்கிவிட்டது..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சண்முகம் போன முறை பிஜேபி காரணம் காட்டி எங்களுக்கு தொகுதிகளை குறைத்தார்கள். இந்த முறை அப்படி எல்லாம் நடக்கக் கூடாது நாங்கள் இந்த முறை கூடுதல் தொகுதியில் போட்டியிட விரும்புகிறோம் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றிலேயே இவ்வளவு குறைந்த தொகுதியில் போட்டியிட்டது

சென்ற தேர்தலில் தான் இந்த முறை அப்படி நடக்காது. திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டது என்று சொல்கிறது.

அப்படி எல்லாம் இருப்பதாக தெரியவில்லை பத்து மாதத்தில் எல்லா தேர்தல் வாக்குறுதிகளும் திமுக நிறைவேற்ற வேண்டும் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

உடனே ஏற்கனவே நாங்கள் சொன்னது போல் இந்த முறை கூடுதல் தொகுதி கேட்டு திமுகவிற்கு அழுத்தம் தருவோம் என்கிறார் திருமாவளவன். தனக்கு ராஜ்யசபா வாய்ப்பு வழங்காததால் திமுக வேட்பாளர் ராஜ்ய சபா வேட்பு மனு தாக்கல் செய்த போது கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக அழைத்தும் வைகோ வரவில்லை. என்றார் விகடகவியார்.

"சரி இந்த விஷயத்தை திமுக எப்படி பார்க்கிறது அதை சொல்லும் "என்றோம் நாம் .

திமுகவில் சிலர் இதை எல்லாம் ஒரு பெரிய விஷயமாகவே பார்க்கவில்லை.

அதிமுக பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது.

அப்படி இருக்கும் போது அவர்கள் அதிமுக பக்கம் போக வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

, திமுக தலைவர் அப்படி நினைக்கவில்லை நமது பலம் கூட்டணி தான் நாம் யாரையும் வெளியே அனுப்பக்கூடாது அதிமுக இல்லை என்றால் அவர்கள் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர மாட்டார்கள் என்று என்ன நிச்சயம். அவசரப்பட்டு யாரும் எதுவும் கருத்து சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் என்றார் விகடகவியார்.

திமுகவை பொருத்தவரை இந்த முறை பல மூத்த தலைவர்களுக்கு தேர்தல் வாய்ப்பு இருக்காதாம்.

அதில் முதலில் வருபவர் துரைமுருகன் தான். அவரால் முடியவில்லை மேடையிலேயே தூங்கி விடுகிறார் அவர் கட்சிப் பணி பார்க்கட்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த விஷயம் துரைமுருகனுக்கும் தெரியும்.

மூன்று முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்கள். தொகுதிக்கு ஒன்றுமே செய்யாதவர்கள் இப்படி பல ரக பட்டியலை எடுத்து வைத்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். சபரீசனின் ஆய்வு அமைப்பு திமுகவின் வாக்குகளை தான் விஜய் பிரிப்பார் என்று சில விவரங்களை ஆதாரத்துடன் இணைத்து முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது.

மதுரையில் நடக்கும் முருகர் மாநாடு பாஜகவின் இந்துக்கள் ஓட்டை ஒன்று சேர்க்கும் ஒரு முயற்சி. ஹிந்து கடவுள் பற்றி இப்போதைக்கு திமுக தலைவர்கள் எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருக்கவும் என்றும் சபரீசன் அமைப்பு யோசனை சொல்லி இருக்கிறது "என்றார் விகடகவியார்.

20250513203957229.jpeg

"சரி அமித்ஷா மதுரை வந்தாரே ? அந்த விஷயத்துக்கு வாரும் என்றோம் நாம்.

அமித்ஷாவை பொறுத்தவரை அவர் அவசரப்பட மாட்டார். எதையும் மறக்க மாட்டார்.

அமித்ஷா வந்தபோது தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோல் என்ற போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. இதை பிஜேபியின் மூத்த தலைவர்கள் அமிஷா கவனத்திற்கு கொண்டு சென்றார்கள்.

மூத்த தலைவர்களுடன் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை செய்த போது நான் பெரும் பாடுபட்டு அதிமுகவை நாம் நம் வழிக்கு கொண்டு வந்திருக்கிறேன் ஏதாவது எக்கி தப்பாக பேசி கூட்டணியை உடைத்து விடாதீர்கள்.

திமுகவைப் பொறுத்தவரை நாம் எது செய்தாலும் உடனே அவர்கள் நீதிமன்றத்திற்கு போய் விடுகிறார்கள் நீதிமன்றம் இப்போதைக்கு நமக்கு சாதகமாக இல்லை. அதை எப்படி சரி செய்வது என்று எனக்கு தெரியும் நான் பார்த்துக் கொள்கிறேன்.

கட்சியை வளருங்கள் உறுப்பினர்கள் அதிகம் சேருங்கள் என்றவர்

. அண்ணாமலை பார்த்து உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்

நீங்கள் தலைவர் இல்லாவிட்டாலும் பழையபடி சுறுசுறுப்பாக திமுக எதிர்ப்பு வேலையை ஆரம்பிங்க என்று உசுப்பி விட்டிருக்கிறார் அமித்ஷா.

அண்ணாமலையும் பழையபடி சுறுசுறுப்பாக பேட்டி அறிக்கை என்று கலக்க ஆரம்பித்து இருக்கிறார். அதிமுகவை பற்றி அவர் எதுவும் பேசுவதில்லை என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.