தொடர்கள்
அனுபவம்
இறந்து சில நிமிடங்களில் உயிர்த்தெழுந்த பெண்!- மாலாஸ்ரீ

20250513204504144.jpeg

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த 33 வயதான பிரியானா லாஃபெர்டி என்ற பெண் மயோக்ளோனஸ் டிஸ்டோனியா என்ற ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் திடீரென மொத்தமாகச் செயலிழந்துவிட்டது.

அப்போது அவர் உயிர் பிரியும் தருணம், 'நீங்கள் ரெடியாக இருக்கிறீர்களா?' என்ற குரல் கேட்டதாகவும், அந்த குரல் கேட்ட நொடியில் எல்லாமே இருண்டுவிட்டதாகவும் பிரியானா லாஃபெர்டி கூறுகிறார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரியானா லாஃபெர்டி மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இருப்பினும், அப்போதும் தனது உள்ளுணர்வு தன்னுடனே தொடர்ந்தது என்று பிரியானா லாஃபெர்டி கூறியுள்ளார்.

"மரணம் என்பது ஒரு மாயை. நமது ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை. நமது உணர்வு உயிருடன்தான் இருக்கிறது. நாம் உருமாற மட்டுமே செய்கிறோம். என் எண்ணங்கள் அப்படியே இருந்ததை உணர முடிந்தது. அங்கு நடந்தது ஒரு மாயை போலிருந்தது. அது ஒரு ஆசீர்வாதம் என்றே சொல்லலாம். நான் திடீரென எனது உடலில் இருந்து பிரிந்து தனியாக மிதப்பது போல் உணர்ந்தேன்.எனது மனித உருவத்தைப் பார்க்கவோ, நினைவில் கொள்ளவோ முடியவில்லை. நான் முழுமையாக விழிப்புடனே இருந்தேன், நான் உயிருடன் இருப்பது போலவே உணர்ந்தேன். எனது உடலில் எந்த வலியும் இல்லை. அமைதி மற்றும் தெளிவு மட்டுமே இருந்தது. அப்போதுதான் பூமியில் வாழும் வாழ்க்கை மட்டும் இறுதியானதோ, முடிவானதோ இல்லை என்பதை நான் உணர முடிந்தது. நமக்கு மேலான ஒரு அறிவு இருக்கிறது.

மரணத்துக்கு அருகில் சென்றுவிட்டுத் திரும்புபவர்களின் அனுபவங்கள், சிக்கலானவை மற்றும் விளக்கக் கடினமானவை. அவற்றை ஆய்வாளர்கள் புரிந்துகொள்ள தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

கடந்த மாதம் கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில், ‘உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு மங்கலான ஒளியை வெளியிடுகின்றன. இறக்கும்போது மட்டுமே அந்த மங்கலான ஒளி மறைந்துவிடுகிறது. இதைத்தான் அல்ட்ராவீக் ஃபோட்டான் எமிஷன் (Ultraweak photon emission - UPE) என்றும் ஆய்வு விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.