தொடர்கள்
பொது
இஸ்ரேல்–ஈரான் போர் ?!-தில்லைக்கரசிசம்பத்

20250520170600234.jpeg

நன்றி: தினமணி

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல், பாதுகாப்பு, ஏவுகணைகள், வான்வழி தடுப்புகள் ஆகியவற்றில் எக்கச்சக்க செலவு செய்துகொண்டிருக்கிறார்கள்.

சில காலமாகவே ஈரான் பெரும்பொருளாதார சிக்கலில் உள்ளது.

போரால் அதிகளவு ஈரான் நிலைக்குலைய வாய்ப்பு இருந்தாலும், இஸ்ரேல் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கூட பாதிக்கப்படும்.

தற்போது ஈரான், இஸ்ரேல் வானின் இரும்புத் தடுப்புக்கோட்டையை மீறி நீள்தூர ஏவுகணைகளை கொண்டு அடித்திருக்கிறது.

ஈரானிடம் இல்லாத பல நவீன ஆயுதங்களை கொண்டு இஸ்ரேல் ஈரானுக்கு தற்போது பதிலடி கொடுத்து வருகிறது.

சீனா, ரஷ்யா ஈரானுக்கு ஆதரவு என்று சொன்னாலும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும் அளவுக்கு ஈரானுக்கு இவ்விரு நாடுகளும் உதவவில்லை. அதிலும் சீனாவுக்கு சவூதி, ஐக்கிய அரபு நாடுகள் , இஸ்ரேல், ஐரோப்பா இவைதான்முக்கிய வணிகக் கூட்டாளிகள்.

மத்தியகிழக்கு நாடுகளின் அமைதி அழிந்துவிடும் என்பதற்காகவே ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடாது என்பதில் சீனாவும், ரஷ்யாவும் தெளிவாக உள்ளன.

எண்ணெய் வளமிக்க ஈரானுக்கு இவ்விருநாடுகளும் வாடிக்கையாளராக இருந்தாலும் ஈரானுக்கு நேரடி ஆதரவோ, பாதுகாப்போ வழங்காத சூழ்நிலை உள்ளது .

20250520170937984.jpeg

ஈரான் தனியாகவே இஸ்ரேலை மட்டுமல்ல அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் தாக்குதல்களையும் சேர்த்து எதிர்கொண்டு “சமநிலையற்ற போர் சூழ்நிலையில்” உள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் நேரடியாக தாக்கிக்கொண்டேயிருந்தால், ஈரான் ஆதரிக்கும் ஹெஸ்பொல்லா, ஹூத்தி, ஹமாஸ் போன்ற அமைப்புகள் ஒரே நேரத்தில் இஸ்ரேலை பல திசைகளில் தாக்கலாம்.

ஈரான் அமெரிக்காவிடம், தங்கள் நாட்டினை தாக்குவதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்த வேண்டும், அணுவள மையங்கள் பாதுகாப்பு, கத்தார்நாட்டிலுள்ள ஈரானின் சொந்த 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி விடுவிப்பு என கோரிக்கைகள் வைத்த நிலையில்,ட்ரம்ப் ஈரானின் “அயதுல்லாஅலி கொமேனி சரணடையவேண்டும் இல்லையெனில் டெஹ்ரான் பற்றி எரியும்” என கூறியுள்ளார்.

சரணடைந்தால் மட்டுமே மற்ற கோரிக்கைகளை பரிசீலிக்க முடியும் என டிரம்ப் கறாராக கூறிய நிலையில் கொமேனி தனது X பக்கத்தில் “A dog barks, but the caravan marches on.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தலையிட்டு ஈரானை தாக்கும் நிலை உருவானால், அது மத்திய கிழக்கில் பெரிய போராக உருவெடுக்கும்.

டெஹ்ரான் மக்கள் உடனடியாக நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் ட்ரம்ப் ஈரானின் அணு உற்பத்தி மையங்களான நடான்ஸ், ஃபர்தோ,IRGC(இரானிய ராணுவம்) கட்டுப்பாட்டு மையங்களை தாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20250520172053874.jpeg

மத்தியகிழக்கில் ஓயாத போர், அமைதியின்மை? மதம், அரசியலதிகாரம் என்ற காரணங்களா?

வேறொரு முக்கியமான விஷயம் வரலாற்று பின்னணியில் இருக்கிறது.

யூதர்கள் பாபிலோனிய அரசின் கைதிகளாக இருந்தபோது சைரஸ் மன்னன் கிமு538ல் விடுவித்தது முதல் கி.மு.140 முதல் கி.மு. 37 வரை ஜெருசலத்தை தலைநகராக கொண்டு யூதர்களின் ஹாஸ்மொனிய வம்சம் தற்போதைய மேற்கு,தெற்கு இஸ்ரேல் (அப்போதும் காசா யூதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது வரலாற்று கொசுறு) ,ஜோர்டான் நதியின் கிழக்குப்பகுதி, தென் சிரியாவின் பகுதிகளை ஆண்டிருக்கிறார்கள்.

இப்படி இன பெருமைக்கொண்ட யூதர்களின் சரித்திரம் ஒரு புறம். மறுபுறம் உலகின் மிகவும் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான பெர்சியா என்கிற ஈரான்.

3000 ஆண்டு கால மரபு கொண்ட ஈரானில் இஸ்லாமிய ஆட்சிக்கு பிறகும் பெர்சிய மொழியான பார்சியை 80% ஈரானிய மக்கள் பேசுவதால் இன்றும் பார்சிதான் தேசியமொழி.

இன்றும் ஈரானில் இஸ்லாமிய வரலாற்றோடு தொடர்பில்லாத 3,000ஆண்டு பழமை வாய்ந்த பெர்சிய நவ்ரோஸ் எனப்படும் புது வருடவிழா கொண்டாடப்படுகிற அளவுக்கு பெர்சிய கலாச்சாரபண்பாட்டு விழுமியங்கள் தொடர்கின்றன.

மத்தியகிழக்கு நாடுகளில் இப்படிப்பட்ட ஆழமான நாகரிகம், மரபுகள் கொண்ட வெவ்வேறு இனங்கள் ஒரு போதும் தங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

கடைசிக்கட்டம் வரை போராடும் பாலஸ்தீனம் இதற்கு பெரும் உதாரணம்.

ஒரு போரில் வெற்றி யாருக்கு என்பதைவிட யாருக்கு வீழ்ச்சி அதிகம், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

இஸ்ரேல் பிழைத்துக்கொள்ளும். ஏனெனில் அதற்குதவ அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் பில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

20250520171310251.jpeg

சமநிலையில்லா போரில் ஈரானின் தன்னந்தனியான போராட்டம் கடைசியில் எப்படி முடியும் என்பதே பில்லியன் டாலர் கேள்வி?!