நயன்தாரா
தனது சம்பளத்துடன் தனது பாதுகாப்பாக வரும் பவுன்சர்களுக்கு 30 லட்சம் ரூபாய் தனியாக தர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாராம் நயன்தாரா. இப்போது தயாரிப்பாளர்கள் வேறு நடிகைகளை தேடி போகிறார்கள்.
உதய்.கே
அறிமுக இயக்குனர் உதய்.கே இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு அஃகேனம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்கள். இது பெண்களை மையப்படுத்திய படம் இல்லை என்கிறார் இயக்குனர்.
ஜோதிகா
தமிழ் படத்தில் நடிக்க நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என்கிறார் நடிகை ஜோதிகா.
அனுஷ்கா
அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள படம் காட்டி. இது விக்ரம் பிரபு ,ரம்யா கிருஷ்ணன் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் ஜூலை 21-ஆம் தேதி ரிலீஸ்.
பூஜா ஹெக்டே
ஜனநாயகன் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாக பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருக்கிறார்.
திரிஷா
உலக நாயகனுடன் சேர்ந்து நடித்த படத்தில் தயாரிப்பாளரும் அவரே என்பதால் தன்னால் சம்பள விஷயத்தை கறராக பேச முடியவில்லை என்று வருத்தப்படுகிறார் நடிகை திரிஷா.
ஐஸ்வர்யா லட்சுமி
சூரி காமெடியனக இருந்தாலும் அவர் கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவருடன் நடித்ததால் என்னுடைய இமேஜ் குறைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
சம்யுக்தா மேனன்
தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஏற்கனவே தபு மற்றும் துனியா விஜயகுமார் நடித்து வருகிறார்கள். இப்போது மூன்றாவதாக இந்த படத்தில் சம்யுக்தா மேனன் இணைந்து இருக்கிறார்.
அஜித்தின் அடுத்த படத்தில் முதலில் தமன்னா நடிப்பார் என்று சொன்னார்கள். இப்போது அது இல்லை அஜித்துக்கு ஜோடி ஸ்ரீநிதி ஷெட்டி என்கிறார்கள்.
ராஷ்மிகா மந்தனா
அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு நான் நடுங்கிப் போனேன். எதுவும் உலகில் நிரந்தரம் இல்லை என புரிந்தது. நமக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன. எதுவரை வாழ்க்கை செல்லும் என தெரியவில்லை. கவனமாக இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள் மற்றவர்களிடம் கருணையாக இருங்கள் என்கிறார் நடிகை ராஷ்மிகா.
Leave a comment
Upload