விகடகவியார் உள்ளே நுழைந்ததும் ஜில் ஏசியில் அவருக்கு பிடித்த மாம்பழ தூண்டுகளை சுவைத்தார்.
"தலைவருக்கே இப்பதான் கட்சியின் உண்மை நிலைமை தெரிந்திருக்கு" என்று ஆரம்பித்தார்.
'எந்த கட்சி எந்த தலைவர் ?'
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் இப்போதைக்கு திமுக தான் அப்டேட்டில் இருக்கிறது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிர்வாகிகளை சந்திப்பதற்காக உடன்பிறப்பே வா" என்று புதிய திட்டப்படி அறிவாலயத்தில் தொகுதி நிர்வாகிகளை தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார் முதல்வர்.
தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது ?,
மக்களுக்கு நமது திட்டங்களை எல்லாம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறீர்களா ? "என்று கட்சித் தலைவர் கேட்க, பெரும்பான்மை நிர்வாகிகள்.....
"தலைவரே எங்க வேலையை நாங்க கரெக்டா பார்க்கிறோம்.
மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் என்று தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அவர்களுக்கே அது ஏதோ அவர்களுக்கு சொந்த பட்டா போல் அவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
25 வருடமாக மாவட்ட செயலாளர்...
25 வருடமாக சட்டமன்ற வேட்பாளர்...
இப்படி அமைச்சர் என்று அவர்களுக்கே அந்தப் பதவியை எல்லாம் நீங்கள் பட்டா போட்டு தந்து விட்டீர்கள்.
எங்களுக்கெல்லாம் எப்போது வாய்ப்பு, இப்படியே உடன்பிறப்பாகவே இருந்து உழைத்துக்கொண்டே இருக்க வேண்டுமா ? என்று எதிர் கேள்வி கேட்க கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆடி தான் போனார்.
அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக இந்த முறை சட்டசபை தேர்தலில் நீங்கள் புதிய முகங்களை பார்ப்பீர்கள் என்று சமாதானப்படுத்தி அனுப்பி இருக்கிறார்.
அமைச்சர்கள் எங்கள் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை. சத்துணவு பணியாளர் வேலைக்கு கூட கட்சிக்காரர்களிடமே பணம் கேட்கிறார்கள், கட்சிக்காரர்கள் சிபாரிசு எதையும் செய்வதில்லை என்று புகார் புராணம் படித்து இருக்கிறார்கள். இந்த தகவல் எல்லாம் திமுக தலைவருக்கு அதிர்ச்சி தகவலாகவே இருக்கிறது "என்றார் விகடகவியார்.
அறிவாலயம் நடவடிக்கை எப்படி இருக்கும் ? அதை சொல்லும் என்று நாம் கேட்டோம்.
தொகுதி வாரியாக உளவுத்துறை மற்றும் மருமகன் ஆய்வு நடத்தி களநிலவரத்தை முதல்வருக்கு ஒரு புத்தகமாகவே போட்டு தந்து விட்டார்கள். அதன்படி அடர் பச்சை கலரில் அடையாளப்படுத்திய தொகுதி என்றால் நிச்சயம் வெற்றி.
இளம் பச்சை என்றால் திமுக வெற்றி பெறும் இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிகப்பு என்றால் அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதி.
ஆரஞ்சு என்றால் கடும் போட்டி இருக்கும் என்று இப்படி கலர் கலராக தொகுதி நிலவரத்தை மருமகன் பட்டியல் போட்டு காண்பித்து இருக்கிறார்.
மருமகன் கணக்குப்படி 100 தொகுதிகளில் திமுக அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதி என்று அடையாளம் செய்து காட்டியிருக்கிறார்.
இப்போது இதை எப்படி எதிர்கொள்வது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.
'திமுக கட்சியில் மாற்றம் வரும் துணைப் பொதுச்செயலாளர் பதவி உதயநிதிக்கு கிடைக்கும் என்றெல்லாம் பேச்சு வந்ததே !'என்று நாம் கேட்டோம்.
சகோதரி கனிமொழியும் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் துரைமுருகனுக்கு பதில் அமைச்சர் நேருவை கட்சி பொதுச் செயலாளர் ஆக்கிவிட்டு துரைமுருகனுக்கு கௌரவ தலைவர் அல்லது கௌரவ ஆலோசகர் பதிவு தரலாம் என்றெல்லாம் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
இப்போதைக்கு அதெல்லாம் செயல்படுத்த மாட்டாராம் கொஞ்ச காலம் காத்திருங்கள் என்று எல்லோருக்கும் சொல்லி விட்டார் கட்சித் தலைவர் ஸ்டாலின்.
'சரி அடுத்த செய்திக்கு வாரும்' என்றோம். புது எம்பி கமல் நடித்த தக்லைப்படத்தில் இடம்பெறாமல் ஆனால் ட்ரெண்டிங் ஆன முத்தமழைப்பட பாடலை வைத்து அதிமுக ஐடி விங்திமுகவை கலாய்க்கும் விதமாக ' மு க ஸ்டாலின் ஆட்சி முடிந்து போகாதோ, மொத்த பெண்களுக்கும் சேஃப்டி வாராதோ என்று ராகமாக தயாரித்து வெளியிட்டுள்ள பாடல் தான் தற்சமயம் ட்ரெண்டிங். இதற்கு எப்படி பதில் கொடுப்பது என்று தெரியாமல் விழிக்கிறது திமுக ஐடி விங் "என்று சொல்லி சிரித்தபடி மிச்சம் இருந்த மாம்பழத் துண்டுகளை சுவைத்தபடி புறப்பட்டார் விகடகவியார்.
Leave a comment
Upload