தொடர்கள்
அழகு
சிறுமுகை பட்டு - ஸ்வேதா அப்புதாஸ்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் அருகே உள்ள சிறிய ஊர் சிறுமுகை .

20250518224825658.jpg

ஒரு காலத்தில் ரேயான் தொழிற்சாலைக்கு பேர் போன குட்டி நகரம் .

சுற்றுசூழல் பாதிப்பால் ரேயான் தொழிற்சாலை மூடப்பட்டு சிறுமுகை ஒரு கேள்வி குறியாக இருந்தது .

தற்போது மீண்டும் சிறுமுகை உலக பெண்களால் கவரப்பட்டு வருவது ஆச்சிரியமான ஒன்று தான் .

சிறுமுகை பட்டு நகரம் என்று அறிந்து அங்கு பயணம் செய்தோம் .

சிறுமுகை அடைந்தவுடன் நம் கண் முன் தென் பட்டது ஏகப்பட்ட 'சில்க்' அவுசுகள்.

சிறுமுகை நகர் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள கிராமங்களான ஆலாங்கொம்பு , பகத்தூர் , திம்மராயம்பாளையம் , சென்னம்பாளையம் , வெள்ளிக்குப்பம்பாளையம் , வச்சின்னம்பாளையம் , முக்கனுர் , மூலத்துறை என்று ஐயாயிரம் தொழிலாளிகள் கைத்தறி நெசவுத்தொழிலில் தங்களை அர்ப்பணித்து இருபதாயிரம் பேர் இந்த வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் .

சிறுமுகையின் சிறப்பே மென் பட்டு , காட்டன் , கோரா காட்டன் புடவைகள் பெண்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பை பெற்றுள்ளது .

பட்டு என்றால் காஞ்சிபுரம் தான் பிரபலம் .

தற்போது சைலண்டாக சிறுமுகை பட்டு புடவைகள் உலக பெண்களை தன் வசம் இழுத்து அவர்களுக்கு பட்டு புடவை கட்டி பூரித்து நிற்கிறது .

20250518224918891.jpg

சிறுமுகை சென்ற நமக்கு திரும்பி பார்த்த பக்கமெல்லாம் சில்க் ஷோ ரூம்கள் தான் .

சிறுமுகை ஒரு பட்டு நகரமாக உருவெடுக்க முக்கிய காரணம் நெசவாளர் காரப்பன் என்பது குறிப்பிடத்தக்கது .

2025051822514411.jpg

சிறுமுகை நகரில் சில்க் பசாரக உருவெடுத்திருக்கும் தெருவினுள் நுழைந்த நம்மை வரவேற்றது ஏகப்பட்ட சில்க் ஷோ ரூம்கள் .

" அண்ணா வாங்க எங்க கடைக்கு " என்ற அழகிய தமிழ் ஜவுளி பெண்கள் அழைப்பு நம்மை கவர்ந்து இழுத்தது !.

சிறுமுகை ஒரு பட்டு நகராக உருவெடுக்க வைத்த காட் பாதர் காரப்பன் சில்க் ஷோ ரூமினுள் நுழைந்தோம் .

குறைவான விலையில் தரமான மென் பட்டு புடவைகளை பார்த்து மெய்சிலிர்த்து போய்விட்டோம் .

சிறுமுகை பட்டு முன்னோடி நெசவாளர் காரப்பனின் புதல்வர் தண்டபாணியை சந்தித்து பேசினோம் ,

20250518225011966.jpg

" எந்த விளம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக ஐயாயிரம் நெசவு ஆலைகளில் மென் பட்டு என்று அனைத்து பட்டு காட்டன் புடவைகள் தயாரிக்க பட்டுவருகின்றன .

காஞ்சிபுரத்திற்கு அடுத்து எங்க சிறுமுகை பட்டு புடவைகள் ஏராளமான மணப்பெண்களை அலங்கரித்து வருகிறது .

எங்க ஊரில் மட்டும் 70 வது சில்க் ஷோ ரூம்கள் குவிந்திருக்கின்றன என்றால் பாருங்களே .

எங்க அப்பா காரப்பன் தான் 1977 யில் இங்கு பட்டு நெசவாலைகளை உருவாக்கினார் .

ஒரே காலால் நெய்யும் தறியை கண்டுபிடித்தார் . அதை மின்சாரம் மூலமும் இயக்கலாம் .

உடலூனமுற்றோர் எளிதாக இயக்கக்கூடிய தறி !.

2023 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் கைத்தெறி கண்காட்சியில் பங்கு பெற்று விருது பெற்று வந்தார் .

இவரின் சில்க் உற்பத்தி சேவையை பாராட்டி அவினாசி பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது .

இரண்டு மாதங்கள் அதே பல்கலைக்கழகத்தில் கைத்தெறி பேராசிரியராக பணியாற்றி வர கடந்த ஏப்ரல் மாதம் இறைவன் அவரை 75 ஆம் வயதில் அழைத்துக்கொண்டார் என்று கண்கலங்கினார் .

20250518225433414.jpg

எங்களின் பாரம்பரிய கைத்தெறி பட்டு புடவை வாங்க ஜப்பான் , அமெரிக்கா , சிங்கப்பூர் , ஜெர்மன் நாட்டு பெண்கள் வந்த வண்ணமிருக்கிறார்கள் .இங்கு வந்து மென் பட்டு புடவை கட்டி அசத்துகிறார்கள் .

எங்களின் பட்டு கைத்தெறிக்கு என்று ஸ்பெஷல் சில்க் கர்நாடகா சிப்லக்கட்டா என்ற பட்டு பூங்காவில் இருந்து வருகிறது .

20250518225607127.jpg

எங்க அப்பா இரண்டு அற்புதமான புத்தகங்களை எழுதியுள்ளார் 'கைத்தெறிக்களஞ்சியம்' மற்றும் 'கைத்தெறிப்பெட்டகம்'.

சிறுமுகை உலகளவில் அறிய செய்தவர் எங்க அப்பா காரப்பன் .

எங்க சிறுமுகை ஒரு குட்டி பட்டு நகரம் என்று சொன்னால் மிகையகாது ".

ஊட்டி , மேட்டுப்பாளையம் பகுதியில் சினிமா ஷீட்டிங்கிற்கு வரும் ஹீரோயின்கள் சிறுமுகைக்கு விசிட் செய்து மென் பட்டு புடவைகள் வாங்கி செல்லாமல் இருப்பதில்லை .

காஞ்சிபுரம் , ஆரணி பட்டு புடவைகளை மிஞ்சி பெண்களை கவர்ந்து இழுக்கிறது சிறுமுகை பட்டு !.