ஏஐ, ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்றதுமே பலருக்கு பல விதமாக புளியைக் கரைக்கின்றது.
பிரபல உலக அளவில் வேரூன்றிய ஐடி கம்பெனிகள் ஒருவருக்கொருவர் எப்போது இதைப் பற்றி சித்திக்க ஆரம்பித்தோம், அதில் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம். ஒப்பீடு பார்க்கையில் ஆஹா இவர் 20 வருஷத்துக்கு எதிர்காலத்துக்குப் போயிட்டார், இன்னொருவரோ ம்ம்ம்ம்…பஸ் மிஸ் பண்ணிட்டார் என்றே கருத்துக்கள் பறக்கின்றன. கூகுளைக் கூட லேட்டா இறங்கியிருக்கீங்க என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாவே வருவோம் என்று சுந்தர் பிச்சை கூறுகிறார்.
இதே போலத்தான், மொபைல் என்றால் நோக்கியா
என்றிருந்தது. பட்டன் அமுத்தி முறை. அதற்குள் சாம்சங்க் மாதிறியான கம்பெனிகள் டச் ஸ்க்ரீன் மொபைலில் தீவிரமாக இறங்கி மார்கெட் பிடித்துவிட நோக்கியா பாவம் இப்போது இருந்த இடம் தெரியவில்லை. மார்கெட்டும் இல்லை.
இதே போலத்தான் கோடாக் கம்பெனி பிலிம் சுருள் போட்டோவின் அகில உலக டான், மொபைல் கொண்டு வந்த அதி நவீன மாற்றத்தில், போட்டோ எடுப்பது டிஜிட்டலாகியது. கோடாக் திவாலாகியது, அதாவது, வீணாகிப் போனது.
ஐடி உலகில் நேற்றைய பொருள் வழக்கற்றுப்போனது. அதானே! நாளொரு மேனி , இல்லை இல்லை காலை மாலை இரவு என்று சொல்வதற்குள் அடுத்த வெர்ஷன் வந்துவிடுகிறதே. ஒவ்வொரு கணமும் மாற்றம், அதாவது புதுப்புது வெர்ஷன் கொண்டு வரவேண்டும்.
பாருங்களேன்! இந்த மொபைல் வந்தது. வந்தது தான் வந்தது. நேரம் காட்டும் கடியாரமும் சுவரிலும் தொங்கல. மணிக்கட்டிலும் கட்டப்படல. கேமரா போச்சு. பிலிம் சுருள் போச்சு.ரேடியோ போச்சு. அத வுடுங்க பாஸ்.. இந்த SMS வாட்ஸப் வந்தது தந்தி ஆபீஸுக்கு சீல் போட்டாச்சு. டைப் ரைட்டிங்க் மிஷின் போச்சு, ஷார்ட்ஹேண்ட் திறமை போச்சு..சத்தம் போடாம பிரின்ட் பண்ணப்பட்ட புக்ஸ் போச்சு. ரேடியோ போச்சு. இப்பல்லாம் லேன்ட் லைன் போன் யார் வீட்டில இருக்கு?. தினசரிகளும் வாரப்பத்திரிகைகளும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டன. ஆ... நா மாட்டேன் என்றால் உன்னை சீந்த இவ்வுலகில் எவருளார்?
பூமி தக்ளூண்டு ஆயிடிச்சு. பூகோளம் சரித்திரமாயிடிச்சி. நினைச்ச மாத்திரத்த்ல எந்த மூலையையும் எந்த மூலையோடு சேர்த்திடலாம் ஆடியோவிலியோ வீடியோவிலியோ. எந்த புத்தகம் எந்த காலத்தோடதாக இருந்தாலும் அது தான் வலைக்குள் கிடைத்துவிடுகிறதே. அது கிடைக்கலையே? அது விலை ஜாஸ்தி என்றது அந்த காலம். இன்றோ எல்லாம் கிடைக்கிறது வடிகட்டப்படாமல். ஆனால் நேரம் தான் இல்லை.
உலகம் சுருண்டு போச்சா விரிஞ்சி போச்சான்னே தெரியல. புரியல.
இது வரமா சாபமா என்பதற்குள் இந்த செயற்கை நுண்ணறிவு (செநு) வந்தாச்சு.
ஐடி கம்பெனிகள் போட்டி போட்டுக்கொண்டு அதை முழுமையாக உபயோகத்தில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இதனால் இருக்கும் நிலையில் உள்ள வேலைகள் மறைந்து போகும். வேலையின்மை பெருகி போகும் என்றெல்லாம் உலக உருண்டையில் உருண்டு பெரள்கிறது. ஆனால் அதே சமயம் அந்த புதிய பாதையைப் பற்றி படித்தவர்களுக்கான டிமாண்ட் ஜாஸ்தியாகிக் கொண்டே வருகிறது.
செயற்கை நுண்ணறிவு விரிந்தாலும் மனிதனின் அனைத்து நுண்ணறிவுகளையும் அது செய்ய இயலாது. அதாவது, அதனால் மனிதனுக்கு தாக்கம் ஏற்பட்டாலும், அதன் மீது மனிதனின் தாக்கம் தான் ஓங்கியே இருக்கும் என்று சொல்கிறார் ஸ்ரீதர் வேம்பு, நாராயணமூர்த்தி போன்ற ஐடி ஜாம்பவான்கள்.
நாராயணமூர்த்தியின்படி,”செயற்கை நுண்ணறிவு ஐடி வேலைகளை நிறுத்திவிடாது, கெடுத்துவிடாது. மாறாக, அந்த வேலைகளில் வேகத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டுவரும்.”
ஸ்ரீதர்
ஸ்ரீதர் வேம்பு,” செயற்கை நுண்ணறிவு இயக்கும் (ஆட்டோமேஷனால்) தானியக்கமாக்கல் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை நிறைய குறைய வாய்ப்பு உண்டு. உழவு, மக்கள் காப்பகம், கை வினை தொழில் போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்த முடியாது.
Leave a comment
Upload