தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் : ஜாதி ஒழியுமா

2025052018164163.jpeg

சமீபத்தில் ஒருவர் ஜாதி இல்லாதவர் என்று சான்றிதழ் தர வேண்டுமென்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, இது நல்ல விஷயம் தானே. ஜாதி இல்லாமல் இருப்பது எனவே ஜாதி இல்லை என்று சான்றிதழ் தாருங்கள் என்று அரசாங்கத்துக்கு அறிவுறுத்தி தீர்ப்பு தந்தது. இப்படி ஜாதி வேண்டாம் என்று சான்றிதழ் கேட்பவர்கள் எண்ணிக்கை 10 விரலில் முடிந்து விடும். ஜாதி பற்றிய விழிப்புணர்வு நிலைமை இதுதான்.இதற்குக் காரணம் அரசாங்கமும் அரசியல் கட்சியும் தான். ஒரு பக்கம் ஜாதி கூடாது என்று பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள் இன்னும் ஜாதி ஒதுக்கீடை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு பற்றி அம்பேத்கர் சொல்லும்போது இட ஒதுக்கீடு என்பது 10 ஆண்டுகள் மட்டுமே. உண்மையில் தகுதி அடிப்படையில் தான் பணி நியமனம் உட்பட அனைத்தும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். பல பத்தாண்டுகளாக இட ஒதிக்கீடு இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சில குறிப்பிட்ட ஜாதிகள் இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்பது உண்மையில் தகுதியானவர்களுக்கு வாய்ப்புக்கான வாசல் மூடப்பட்டுள்ளது என்பதுதான் நிதர்சன உண்மை. பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு கொண்டு வர எம்ஜிஆர் முயற்சி செய்தபோது எல்லா அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக எதிர்த்தன. ஜாதி இந்தியாவில் தவிர்க்க முடியாதது.

ஜாதி வேண்டாம் என்று சான்றிதழ் பெற்றவர்கள் கூட வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் அவர்களின் உயர்ந்த எண்ணத்திற்கான வாய்ப்பு நிச்சயம் மறுக்கப்படும். நாம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களின் நீங்கள் எந்த ஜாதி அதை உறுதிப்படுத்த ஜாதி சான்றிதழ் கட்டாயம் என்று தான் சொல்கிறோம். ஜாதி வேண்டாம் என்று சொல்லி சான்றிதழ் பெற்றவர்கள் எல்லோருக்கும் கசப்பான அனுபவம் தான் ஏற்படும். ஜாதி ஒழிய வேண்டும் என்றால் அரசியல் தலைவர்களும் அரசாங்கமும் உண்மையாக அதை எதிர்க்க வேண்டும் அப்போது மட்டுமே இது சாத்தியம்.