
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
நடமாடும் தெய்வம் - பாகம் - 3
நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
இந்த வாரம் மூன்றாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி . ஸ்ரீ மஹாபெரியவளின் பால்யகால கதையை விவரிக்கிறது இந்த வாரம். ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் மற்றும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அம்மையாருக்கும் அனுஷ தினத்தில் ஸ்ரீ மகா பெரியவா ஸ்ரீ சுவாமிநாதனாக ஜனித்தது முதல் நடக்கும் வைபவங்களை விவரிக்கிறது இந்த வாரம்

Leave a comment
Upload