அம்மா... அப்பா...
ஆனந்த அகிலம்......!
அம்மா - மூன்றெழுத்து...
வளர் காவியம்....!
நாம் தொட்டு உணரும்
உயிர் ஓவியம்....!
“நாம்”... நாமென உணருமுன்பே...
நமைக் கண்டு மகிழும்…
நாமும் கண்டு மகிழும்...
முதல் உலகம் அம்மா...!
கரம் பிடித்து.... உலகைக் காட்டி...
கலைகளைக் கற்றுக் கொடுக்கும்....
உயரிய உலகப் பேராசிரியர் அப்பா...!
அன்பின் அமுதசுரபி.... அம்மா.
ஆற்றலின் களஞ்சியம்... அப்பா.
அன்னையர் தின...
இனிய வணக்கங்கள்......
இருவருக்கும்...!
இந் நாள் மட்டுமல்ல....
எந் நாளும்...!
Leave a comment
Upload