ஐபிஎல் போட்டிக்கு ஒரு வாரம் லீவு விட்டு முடிந்த மறுவாரமாகிய இந்த வாரம், 63 வது மேட்சிலேயே அரை இறுதிக்கு விளையாடும் முதல் நான்கு அணிகள் முடிவாகியது. இது அணிகளின் புதிய அராஜக ஆட்டத்துக்கு எடுத்துக்காட்டு. எப்போதுமே கடைசி நாள் வரை, கடைசி மேச் வரை, கடைசி பந்து, அதுலயும் மூன்றாமவர் அந்த கடைசி பந்தை கடைசி பந்துதான் என்று அறிவிக்கும் வரை இஸ்துகினே போகும் இந்த ஜவ்வு. அப்பப்பா, எத்தினி பேரோட பீபீ ஏறுமுகமகவே இருக்கும்.
குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் அந்த தர வரிசையில் முன்னேற்றம் தான் அவை.
லீக் வரிசையில் இன்னும் ஏழு மேட்சுகள் ஆட வேண்டி இருக்கையிலேயே இந்த அரை இறுதி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டது இது தான் முதல் முறை. இல்லையென்றால் கடைசி மேட்ச் வரை மற்றொருவர் தோற்றுவிட்டால் இவர் மூச்சு விடுவார், முன்னேறியும் விடுவார். மற்றொருவர் ஜெயிச்சாலும் இவர் மூச்சு சரியாகும். கலி காலம்.
இந்த மாதிரி கடைசி வாரம் கிரிக்கெட் பண்டிதர்களின் ஹேஷ்யங்கள் எல்லை மீறி, நிறைய பலப்பல கணித சமன் பாடுகள் கொடுத்த வண்ணம் இருப்பார்கள். கூடவே மழையும் தன் பங்குக்கு தன் கை வரிசை காட்டும். இந்த மழையார் இந்த பண்டிதர்களுக்கு டஃப்பு கொடுப்பார். பாருங்களேன், இந்த தொடரில் இது வரை, இரண்டு மேட்ச்கள் மழையினால் தடைப்பட்டுவிட்டன. பாதிக்கப்பட்ட அணிகளுக்கு தலா ஒரு பாயிண்டு கிடைத்தது.
ஒன்று மட்டும் நிச்சயம். இனி 220 ரன்கள் குறைந்த பட்சமா அடிக்கணும். அந்த இலக்கையே இலகுவாக அடித்துவிடுகிறார்கள். அடுத்த தொடரில் 300 ரன்களை எடுக்கும் நிலை வரலாம். கிட்டத்தட்ட இந்த T20 தொடர் பேட்ஸ்மன் ஆட்டங்கள் தான். பௌலர்களின் கை வரிசை குறைந்து வருகிறது.
இன்றைய நிலையில், ஐந்து முதல் பத்து ரேங்க்காளர்கள்
5) 13 புள்ளிகளுடன் டெல்லி கேப்பிடல்ஸ்
6) 12 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
7) 12 புள்ளிகளுடன் லக்னௌ சூப்பர் ஜயண்ட்ஸ்
8) 9 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஹய்தராபாத்
9) 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ்
10) 6 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ்
இந்த வாரம் ஆடப்படும் மேட்சுகளில் இந்த ரேங்குகள் மாறும்.
இந்த வாரத்தில் ஒரு மேட்ச்சானது வெளியேறிய அணிகளான கொல்கத்தாவுக்கும் ஹைதராபாதுக்கும் இடையிலானது. ஆடிக்கொண்டார்கள் ஆசை தீர.
பெங்களூறுடனான மேட்ச் மழை கெடுக்க கொல்கத்தா அணி அன்றே வெளியேறியது.
மும்பை இண்டியன்சுடன் 21 ஆம் தேதி ஆடிய மேட்ச்சில் சூரியக்குமார் யாதவின் டமால் டிமீல் ஆட்டத்தில் டெல்லி கடுமையாக தோற்றுப்போனது. இதில் வருத்தம் என்னவென்றால், அது வரை வெகு ஜோராக ஆடி வந்த அந்த அணி ஏனோ தொயிந்து போனது. அதில் நமது விக்கட் கீப்பர் பேட்ஸ்மேன் கே எல் ராஹுல் இத்துணை அபாரமாக ஆடியும் வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.
8, 9, 10 ரேங்க் வாங்கினவுங்க லீவுக்கு முன்னாலேயே வெளியேறியவுங்க தான்.
ஷ்ரேயாஸ் அய்யரின் பஞ்சாப் அணி நன்றாக ஆடி வருகிறது.
டெல்லியை குஜராத் ஜெய்த்தது தான் செம்ம ஹைலைட். டெல்லி வெச்ச 200 ரன்கள் என்ற இலக்கை ஓப்பனிங்க்கில் இறங்கிய கில்லும் சாய் சுதர்ஷனும் விக்கெட் இழக்காமல் கில்லி மாதிரி ஆடி பத்தொன்பது ஓவரிலேயே அடித்து கொடுத்து விட்டனர். இதில் விழுந்தவர்கள் தான் டெல்லி. எந்திரிக்கவேயில்லை. அந்த மேட்ச்சை பார்த்தவருக்கு விருந்துதான். ஒரு க்ளினிகல் ஆட்டம். இதைத் தொடர்ந்து மும்பை இண்டியன்ஸோடு கடுமையாக தோற்றதில் அறை இறுதியிலிருந்து வெளியேற வேண்டிவந்தது டெல்லிக்கு.
லக்னௌ அணியின் வெளியேற்றம்: ஹைதராபாதுடன் ஆடி தோற்றதில் லக்னௌ வெளியேறியது.
காயங்களினால் நல்ல வேக பந்து வீச்சாளர்களை போட்டி தொடக்கத்திலே இருந்து உபயோகப்படுத்த முடியாதுபோனது ஒரு அடி தான். கூடவே அவர்களையும் இருப்பில் வைத்திருந்தது லக்னௌ அணியை முடவனாக்கி விட்டது என்று அதன் கேப்டன் சொல்லிவிட்டார்.
61ஆவது மேட்ச் இவர்களுக்கு மேல் முகமா? இறங்குமுகமா?, அதாவது, ஜெயித்தால் ப்ளே ஆஃப்புக்கு போகலாம் இல்லையெனில் வெளியேற்றம் தான் (முக்கிய குறிப்பு. இதுலயும் வெற்று பெறணும், இனிமேல் ஆடுற மேட்சுகளிலேயும் வெற்றியே பெறணும் என்ற ஒரு சின்ன கண்டிஷனும் கொசுறு) என்று இருந்த அந்த மேட்ச்சில், எப்போதும் டூ டவுனில் ஆட வரும் பந்த் அன்று , முதலாளியின் செயல் திறன் மதிப்பீட்ட்டில் பேட்டிங்கில் ஒன்றுமே லாயக்கில்லை என்ற மதிப்பீட்டை மாற்ற முயற்சிக்க ஒரு கடைசி வாய்ப்பு என்ற நிலையில், இன்று எப்படியும் ஆடி அசத்தலாம் என்று ஒன் டவுனிலேயே களம் இறங்கினார். பாவம் அவரது துரதிர்ஷ்டம், ஆறு பந்துகளில் வெறும் ஏழே ரன்களில்அவுட்டாக, முதலாளி, தனது கேப்டன் சீப்பா அவுட்டாகிது கண்டு கோபமுடன் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து போனது ஒரு இண்டர்னெட்டில் ஒரு பெரிய ட்ரெண்டிங்கே ஆகி விட்டது.
இந்த வெளிப்பாடு ஆட்டக்காரர்களுக்கு தமது இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த் இயலாது போகும். அதிலும் இதுவரை ஐபிஎல் சரித்திரத்தில் அதிக விலையில் ஏலத்தில் வந்தவர் பந்த். கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்பது கிரிக்கெட் பண்டிதர்களின் கணிப்பு எனது உள்பட.
டெஸ்ட் மேட்சுகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலிக்கு பாரத ரத்னா கொடுக்கணும் என்று குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. உங்கள் காதுகளிலும் ஒலித்திருக்குமே?
இன்றைய நிலை
குஜராத்தின் ப்ரசித் கிருஷ்ணா 21 விக்கெட்டுகள் எடுத்து பர்ப்பிள் கேப்பும்,
இது இரண்டாவது வாரமாக இந்த கௌரவத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
குஜராத்தின் சாய் சுதர்ஷன் 617 ரன்கள்.எடுத்து ஆரஞ்ச் கேப்பும் பெற்றிருக்கிறார்கள். இருவருமே குஜராத் அணியைச் சேர்ந்தவர்கள். அவர்களது அணியும் முதல் ரேங்கில் இருக்கிறது. நம்ம சென்னையைச் சேர்ந்தவர் தான் இவர். இவர் இனி நமது நாட்டுக்காக ஆடடுவார் அனைத்து முறைகளிலும், அதாவது டெஸ்ட், T20, ஒன் டே தொடர். நமது விகடகவி ரசிகர் சார்பில் விகடகவியும் சாயி சுதர்ஷனுக்கு மனப்பூர்வமானவாழ்த்துக்கள் தெரிக்கிறது.
இன்னும் இரண்டு வாரம் இந்த விழா தொடரும்.
Leave a comment
Upload