தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 078 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240304080654605.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சாரிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சாரின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

ஸ்ரீ கனகதாரா லக்ஷ்மி நாராயணன்

அந்தக்கால கதைகளை ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் அவர்கள் சொல்வதை கேட்கும் போது நமக்கு மெய்சிலிர்க்கிறது. மிகப்பெரிய ஜமீன் பரம்பரை ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு பெரியவாளின் ஆசீர்வாதத்தில் வளர்ந்த கதை.

தன் அனுபவத்தை விவரிக்கும் போதே ஆனந்த கண்ணீர் ததும்புகிறது