பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான், இந்திய எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது.
பாகிஸ்தான் பதிலடி தர வேண்டும் என்று நினைத்து புதன் இரவு இந்திய எல்லைக்குட்பட்ட அவந்தி புரா, ஸ்ரீநகர், ஜம்மு பதான்கோட் , அமிர்தசரஸ், கபூர்தலா, பூஜ் உள்ளிட்டபல பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்க முயன்றது.
இந்த தாக்குதல் இந்திய ராணுவம் எதிர்பார்த்தது தான்.
அதை எதிர்கொள்ளவும் தயாராகத்தான் இருந்தது.
பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்திய விமானப்படை தடுத்து நிறுத்தி அவற்றை எந்த சேதாரமும் இந்திய பகுதிக்கு வரவிடாமல் தடுத்து செயலிழக்க வைத்தது.
இந்த தாக்குதலின் போது வான்வழி அச்சுறுத்தலை தடுக்க பயன்படும் ஏவுகணை தடுப்பு கட்டமைப்பான S-400' சுதர்சன் சக்கரா'வை முதல் முறையாக பயன்படுத்தி பாகிஸ்தானை அதிர்ச்சியடைய வைத்தது இந்திய விமானப்படை.
எஸ் 400 சுதர்சன் சக்கரா என்பது விஷ்ணுவின் கையில் சூழலும் சக்கரத்தை நினைவுபடுத்த இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
விஷ்ணு சக்கரம் அபரீதமான சக்தி கொண்டது. எஸ் 400 சக்ராவும் அந்த அளவு சக்தி கொண்டதுதான். இந்த ஏவுகணை நவீன ராணுவ தளவாடம் என்று சொல்லலாம் .தாக்குதல் மிகவும் துல்லியமாக இருக்கும். உலகின் மிகவும் மேம்பட்ட நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளில் இதுவும் ஒன்று. எஸ் 400 ஏவுகணை ஆறு லாஞ்ச்சர்கள், மேம்பட்ட ரேடார் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு மையம் ஆகியவை கொண்டது.
இது ரஷ்ய தயாரிப்பு. ஐந்து எஸ் 400 ஏவுகணைகளை இந்தியா வாங்கி இருக்கிறது.. அவற்றில் மூன்று தற்சமயம் செயல்பாட்டில் இருக்கிறது.. இதன் விலை கிட்டத்தட்ட 35 ஆயிரம் கோடி. இது வாங்குவதற்கான ஒப்பந்தம் 2018-ல் கையெழுத்தானது. .
எஸ் 400 ஏவுகணை என்னென்ன செய்யும் என்பதையும் ஒரு ராணுவ அதிகாரி விளக்கினார்.
400 கிலோமீட்டர் வரையிலான வான் வழி அச்சுறுதல்களை கண்டறிந்து, கண்காணித்து, எதிரி நாடு திருட்டுத்தனமா தாக்குதல் நடத்த முற்பட்டால் அதையும் கண்டுபிடித்து விமானங்கள், போர் விமானங்கள், ட்ரோன்கள், கப்பல்களையும் சொல்லி வைத்தார் போல் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தும். இது வச்ச குறி தப்பாது என்கிறார்..
அந்த வேலையைத்தான் நேற்று செய்து பாகிஸ்தானுக்கு மூக்கு உடைந்தது விஷ்ணு சக்கரம் என்றால் சும்மாவா !!
Leave a comment
Upload