ரஷ்யா உக்கிரைன் போர் தொடங்கி இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டது .
போரில் உக்கிரைனில் நிறைய கட்டிடங்கள் , பள்ளிகள் , மருத்துவமனைகள் , என மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக ரஷ்ய தாக்குதலில் நிலை குலைந்துவிட்டது.
ரஷ்ய –உக்கிரைன் பேச்சுவார்த்தை முலம் போரினை முடிவுக்கு கொண்டு வர ஏற்பாடு ஆகியிருந்த நேரத்தில்…
உக்கிரைனிலிருந்து ரஷ்யாவின் வடக்கு ஆர்டிக் வட்டத்திற்கு மேல் உள்ள மர்மன்ஸ்க் முதல் கிழக்கில் உக்கிரைனிலிருந்து 8000 கி மீ தொலைவில் உள்ள அமுர் பகுதி வரை சென்ற கண்டெயினர் லாரிகள் மேற்புறமிருந்த பகுதி ரிமோட் கண்ட்ரோல் முலம் தானாக திறந்து உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் பறந்து ரஷ்ய அணு ஆயுதங்களை ஏற்றி செல்லும் திறன் கொண்ட விமானங்களை தாக்கி அழித்தது.
கண்டெயினர் லாரி டிரைவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தங்கள் ஒட்டி வந்த லாரியில் இருந்த கண்டெயினர் மேற்பகுதியிலிருந்த 117 ட்ரோன்கள் சிலந்தி போல் பறந்ததை பார்த்து லாரி டிரைவர்கள் கல்லெரிந்தேரினர்.
அடுத்த சில நிமிடங்களில் … 117 ட்ரோன்களுக்கும் தனி தனி பைலட்டுக்கள் லேட்டஸ்ட் சேட்லைட் டெக்னாலாஜி உதவியுடன் கிட்டதட்ட ரஷ்யாவின் அணு ஆயுதம் ஏற்றி செல்லும் 41 போர் விமானங்கள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டதாக யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதில் ரஷ்ய Tu-95, Tu-22 மற்றும் Tu-160 ஆகிய போர் விமானங்களை நிறைய சேதம் என்றும் இது பழைய விமானங்கள் என்பதால் இதனை பழுது பார்க்க முடியாது.
அமைதியான எங்களது நகரங்களைத் தாக்கிய போர் விதிமுறை மீறாமல் ரஷ்ய ராணுவ விமான நிலையங்கள் மற்றும் விமானங்களைத் தாக்கினோம். இந்த "ஸ்பைடர் வெப்" தாக்குதல்கள் ஒரு வருடத்திற்கு மேல் சிந்தித்து செயல்படுத்தினோம். இதில் ரஷ்யா ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இழந்திருக்கலாம் .இந்த ஸ்பைடர் வெப் தாக்குதலால் ரஷ்யாவிற்கு 7 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தினோம் என்று உக்கிரைன் சொல்கிறது.
ரஷ்ய இதனை மறுக்கவில்லை அதற்கு பதிலாக உக்கிரைன் மீது தொடர் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது.
யானைக்கும் அடி சறுக்கும் இதுதானோ!
Leave a comment
Upload